மெர்சல் படத்திலிருந்து ஜிஎஸ்டி விமர்சன காட்சிகள் நீக்கம்
மெர்சல் படத்திலிருந்து ஜிஎஸ்டி விமர்சன காட்சிகள் நீக்கம்
வெற்றி..வெற்றி..மாபெரும் வெற்றி என தமிழிசை கைதட்டும் நேரம்
ஆக தமிழிசைக்கு அஞ்சும் நிலைக்கு விஜய் சென்றுவிட்டார், இனி எவனாவது தளபதி தலைவலி என பேசட்டும் பார்க்கலாம்
ஆனாலும் அன்று பராசக்தி முதல் ராமசந்திரனின் பல இம்சை காட்சிகளை அனுமதித்த காமராஜர், பக்தவக்சலம் போன்றோரின் பெருந்தன்மை தெரியும் நேரமிது
அவர்கள் அன்றே இப்படி கழுத்தை நெறித்திருந்தால் இந்த ராமசந்திரன் எல்லாம் வந்திருக்க முடியுமா?
இருக்கட்டும்
“கலையின் வடிவம் சினிமா, அதுல என் கருத்துக்களை சொல்லி கொண்டே இருப்பேன், சினிமாவில் என்னை தடை செய்தால் நாடகம் நடிப்பேன், நாடகத்தை தடை செய்தால் தெருவில் நாடகம் போடுவேன், என்னடா செய்வீங்க டேய் .” என சவால்விட்ட எம்.ஆர் ராதாவும் நினைவுக்கு வருகின்றார்
அக்காலம் பெருந்தன்மையான ஆட்சியர் காலமாகவும், கலைஞர்களில் சமூக நோக்கம் கொண்டோர் இருந்த காலமாகவும் இருந்திருக்கின்றது.
ஏம்பா விஜய், நீர் உண்மையிலே நல்ல சமூக நோக்கம் கொண்ட நடிகர் என்றால், ராதா போல சவால்விடும் பார்க்கலாம்