மெல்ல அல்ல, உடனே தமிழ் இனி சாகும்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் பத்தாம் வகுப்பிலிருந்து தமிழ் கட்டாயம் இல்லையாம்

இது பெரும் கண்டனத்திற்கும் வருத்ததிற்கும் உரியது, தமிழ் இனி எப்படி வாழும்?

இந்தி எதிர்ப்பு திணிப்பு என பொங்குபவர்கள் எல்லாம் தமிழை குழிதோண்டி புதைக்கும்பொழுது காணவில்லை

யார் ஆட்சி நடக்கின்றது?

தமிழுக்காய் 97 பேர் உயிரிழந்த இந்தி எதிர்ப்பு போரில் ஆட்சிக்கு வந்த திராவிட கட்சியின் ஆட்சி நடக்கின்றது

இந்த ஆட்சியில்தான் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் கட்டாயமில்லை என்கின்றார்கள்

பலத்த அமைதி ஏன்?

எல்லா கட்சிக்காரனும் எல்லா கட்சியின் முக்கிய பிரமுகரும் அவசர அவசரமாக சிபிஎஸ்இ பள்ளி திறப்பு, அனுமதி வாங்குதல் என மகா பிசியாகிவிட்டார்கள்

இவர்களா கண்டிக்க போகின்றார்கள்

சரி அவர்கள்தான் சொல்லமாட்டார்கள், அவர்களை கண்டித்து கொதித்துகொண்டிருக்கும் தமிழமைப்புகள் எங்கே போயிற்று என்றால் எல்லாம் மல்லாக்க கிடக்கின்றன‌

இங்கு எல்லாமே நாடகம், எல்லாமே சுயநலம்

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் கட்டாயமில்லை என்ற விஷயம் உடனே மாற்றபட வேண்டும்

இல்லாவிடில் தமிழுகும் தமிழகத்திற்கும் இழைக்கபடும் மிகபெரும் அநீதியாகும்

அதை பார்த்துகொண்டிருக்கும் கட்சிகளும் இயக்கங்களும் அந்த அநீதியில் பங்கெடுக்கின்றன‌

மெல்ல அல்ல, உடனே தமிழ் இனி சாகும்