மேட்டூர் திறக்கபட்டு காவேரி கல்லணைக்கு வந்தாலொழிய என்ன வெற்றி?
காவேரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி கூடியிருக்கின்றார்கள்
கன்னடமோ உங்களுக்கு ஜூன் மாதத்திற்குரிய நீரை கொடுத்தாகிவிட்டது என்றிருக்கின்றது, இவர்களும் ஆமாம் என சொல்லிவிட்டு இப்படியே இந்தமாத நீரையும் கொடுத்துவிட வேண்டும் என சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள்
அதுவும் கன்னடம் உங்களுக்கு ஜூன் மாதமே நிறைய கொடுத்துவிட்டதால் ஜூலையில் குறைத்துதான் கொடுப்போம் என்றாலும் “நீங்கள் நியாஸ்தன்..” என சொல்லி வணங்கிவிட்டு வந்தாயிற்று
பழனிச்சாமி இது மாபெரும் வெற்றி வெற்றி என குதித்துகொண்டிருக்கின்றார்
வந்தது கபினியின் உபரி நீர், இந்த தீர்ப்பு இல்லாவிட்டாலும் அந்த நீர் வந்திருக்கும், உபரி நீர் போகத்தான் நமக்குள்ள நீரை வாங்க வேண்டும்
ஆனால் மழைக்கால வெள்ளத்தை அதுவும் 10 டிஎம்சியினை கணக்கு காட்டி தமிழகத்தை ஏமாற்றிவிட்டது கன்னடம்
பழனிச்சாமியோ வெற்றி வெற்றி என தன் வழக்கமான ஏமாற்று வேலையினை தொடர்கின்றார், மேட்டூர் காய்ந்து கிடக்கின்றது
மேட்டூர் திறக்கபட்டு காவேரி கல்லணைக்கு வந்தாலொழிய என்ன வெற்றி?
மகா மோசமாக காவேரியில் ஏமாற்றபட்டு பட்டை போடபட்டு அனுப்ப பட்டிருக்கின்றது தமிழகம்
இதை கேட்கவோ, கண்டிக்கவோ யாருமில்லை என்பதுதான் சோகம்