மேலவை உதிக்கட்டும்
தேர்தல் அறிக்கைகள் என ஆயிரம் வந்துகொண்டிருக்கின்றன, இன்னும் வரலாம்
தமிழக கட்சிகள் ஒன்றாவது தமிழக மேலவை அமைக்கபாடுபடும் என சொல்லவே இல்லை என்பதுதான் சோகம்
இந்தியாவுக்குள் எல்லா சிக்கலும் எங்களால் தீர்க்கபடும் என்கின்றார்கள், ஆனால் மேலவையினை மட்டும் மறக்கின்றார்கள்
அதில் பலத்த அரசியல் உண்டு
கற்றோராலும் சிந்தனையாளராலும் நிரம்பபட்டிருந்தது அந்த அவை, ராமசந்திரன் வரும்வரை அது நன்றாய் இருந்தது
பொதுவாக தன்னைவிட படித்தவர்கள் தனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் ராமசந்திரனுக்கு இருந்தது கட்சிக்குள் அது பலித்தது
ஆனால் மபொசி போன்றவர்கள் இருந்த மேலவையில் அது பலிக்கவில்லை
சட்டமன்றம் போலவே அதையும் நாடகமேடையாக்க நினைத்த ராமசந்திரன் வெண்ணிற ஆடை நிர்மலாவினை அங்கு அனுப்ப முயன்று தோற்று அந்த அவமானத்தில் அதை கலைத்தே விட்டார்
அது திரும்ப வரகூடாது என்பதில் கவனமாய் இருந்தது டெல்லி, அதில் அதற்கொரு சந்தோஷம்
கலைஞர் கடைசி வரை தமிழக சட்டசபையில் தனி மெஜாரிட்டி இல்லை என்பதால் அவராலும் கொண்டுவரமுடியவில்லை
தன்னால் முடிந்தவரை அதை அமைக்க போராடினார் கலைஞர் ஆனால் சில சக்திகள் அதை முறித்துகொண்டே இருந்தது
ஜெயா ராமசந்திரன் வழி , இப்போதைய பழனிச்சாமி என்ன வழி என அவருக்கே தெரியாது
தமிழகத்தில் அந்த மேலவை நிச்சயம் கொண்டுவரபட வேண்டும்
நிச்சயம் இது நாடாளுமன்ற தேர்தல்தான் ஆயினும் இந்த கோரிக்கை இப்பொழுதே ஒலிக்க தொடங்கினால்தான் சரி
கலைஞரின் மிகபெரிய கனவு அது,நியாயமான கனவும் கூட
மேலவை மறுபடி இங்கு உதிக்கட்டும், சிந்தனையாளர்களால் அது நிரம்பட்டும்