மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் ஏக விஷயங்கள் உண்டு
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கபட வேண்டும் என பொங்குகின்றோம், உச்ச நீதிமன்றமும் சொல்லிவிட்டது
ஆனால் இப்படிபட்ட வாரியங்கள் இதற்கு முன் உண்டா? என்ன அடிப்படையில் இது அமைக்கபட வேண்டும் என்பதற்கு முன் உதாரணம் இல்லை
ஹரியானா பஞ்சாப் மாநிலங்களில் நீர்பங்கீடு உண்டு ஆனால் அவை ஒன்றாக இருந்து பிரிந்தவை அப்பொழுதே பிரித்துகொண்ட அளவுகள் அவை
இந்தியாவிலே முதல் முறையாக அமைக்கபட போகும் நதிநீர் மேலாண்மை வாரியம் என்பதால் பல விஷயங்களை உள்ளடக்கியதாக இது அமையவேண்டும்
குறிப்பாக தமிழகத்திற்கு இத்தனை டிஎம்சி என சொல்லியாயிற்று
ஆனால் மழை குறைவான காலங்களில் மொத்த நீரே 90 டிஎம்சி என குறையும்பொழுது தமிழகத்திற்கு எப்படி முழுநீர் அளவு கொடுக்கமுடியும்
காவேரியின் துணையாறுகள் பற்றியும் முடிவுக்கு வரவேண்டும், இங்கும் பவானி நொய்யல் அமராவதி என காவேரி துணையாறுகள் உண்டு என்பதும் கருத்தில் வரும்
எங்கள் நதி நீரை எல்லாம் கல்லணைக்கு திறந்துவிட வேண்டுமா? ஏன் பவானி, நொய்யல், அமராவதி நீரெல்லாம் வராதா என கன்னட அரசு கேட்கும் கேள்விக்கும் பதில் தயாராக இருக்க வேண்டும்
ஆக மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் ஏக விஷயங்கள் உண்டு
நிச்சயம் வாரியம் உடனே அமைந்து அதன் முடிவு உடனடியாக வராது
கொஞ்சம் நாளாகத்தான் செய்யும், அவ்வளவு சட்ட சிக்கல்கள், உரிமை சிக்கல்கள் இருக்கின்றன
ஆனால் அதனை அமைக்கும் பணியினை உடனே தொடங்குவது நல்லது, பெரும் நிபுணர்களும் அதே நேரம் விவசாயிகள் சார்பிலும் சிலர் பங்கேற்பது மகா அவசியம்
காவேரி மேலாண்மை வாரியம் அமைந்தாலும் அல்லது வேறு அமைப்பு அமைந்தாலும் தமிழக மக்கள் ஏற்றுகொண்டே ஆக வேண்டும் : தமிழிசை
இதற்கு பழனிச்சாமி, மோடியினை எல்லாம் சகிப்பது போல காவேரி ஆணையம் எப்படி இருந்தாலும் தமிழகம் சகிக்க வேண்டும் என புரியும்படி சொல்லியிருக்கலாம் அக்கா
இப்படி சொன்னால் எல்லோருக்கும் எளிதில் புரியும்