மே 3ம் தேதிவரை ஒரு பயலும் பேசகூடாது என்பது மறைமுக கட்டளை

” ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியிருந்தோம். காவிரி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே மாதம் 3-ம் தேதி விசாரிக்கப்படும்”: உச்ச நீதிமன்றம்

இந்த வரிகள் தமிழகத்தில் எப்படி எடுத்துகொள்ளபடுமென தெரியவில்லை, ஆனால் நீதிபதிகள் சொல்லியிருக்கும் விஷயம் திமுகவிற்கு சாதகம்

ஆம் காவேரி நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே தீர்ப்பு கொடுத்தோம் என சொல்லியிருக்கின்றார்கள். அந்த நடுவர் மன்ற தீர்ப்பு வர காரணமாயிருந்த ஒரே அரசியல்வாதி கலைஞர்

ஆக திமுகவினை இனி ஒருபயலும் குற்றம் சொல்லமுடியாது, சொன்னால் சுத்தமாக மண்டையில் ஒன்றுமில்லை என பொருள்

இனி தீர்ப்பை எப்படி அமுல்படுத்த போகின்றோம் என மத்திய அரசு சொல்லவேண்டும்.

இனி மே 3ம் தேதிவரை ஒரு பயலும் பேசகூடாது என்பது மறைமுக கட்டளை என்பதால் ஐபிஎல் கிரவுண்ட் முன்னால் எவனாவது சத்தமிட்டால் அவனை கிரிக்கெட் மட்டையால் சாத்தலாம்