“மை”யில் முடியும் எல்லாம் இனி “மய்” என்றுதான் சொல்லபட வேண்டுமாம்…

அழியும் தமிழை வேகமாக அழித்தே தீரவேண்டும் என பலர் கிளம்பியிருக்கின்றார்கள், அதில் கமலஹாசன் தொடங்கி வைத்த ய்ய்ய்ய் இம்சை கூடுதல் வேகம்.

“மை”யில் முடியும் எல்லாம் இனி “மய்” என்றுதான் சொல்லபட வேண்டுமாம், மயிர் என்பது கூட மய் ஈறு என சொல்லபட வேண்டும் என்ற அளவு தமிழ் பொங்கி வழிகின்றது

இனி தாய்மை என்பது தாய்மய்ய், பெண்மை என்பது பெண்மய் , செழுமை என்பது செழுமய் என்றுதான் சொல்ல வேண்டும் என பல தமிழ் அறிஞர்கள் கிளம்பிவிட்டார்கள்.

கமலஹாசன் கூட “வறுமய்ய்யினை” ஒழிப்பாராம்.

கமலஹாசன் எங்கு தமிழ்கற்றார், எந்த தமிழறிஞர் அவருக்கு சொல்லிகொடுத்தார் என்பது பற்றி எல்லாம் கேள்வி இல்லை.

ஒருவரும் கேட்கவில்லை. ஆனானபட்ட கலைஞர் கூட ஒரு இடத்தில் நான் முறைப்படி தமிழ் கற்றவன் அல்ல, ஆனால் எனக்கு எப்படியோ தானாக தமிழ் வார்த்தையிலும், எழுத்திலும் அமைகின்றது என சொன்னாரே அன்றி, இதுதான் தமிழ் திருத்தம் என சொல்லவே இல்லை

இதற்கெல்லாம் மூலம் யார் தெரியுமா?

அந்த பெரியார்தான். மனிதரை துணிச்சல்காரர், சீர்திருத்தவாதி என ஏற்றுகொள்ளலாம் ஆனால் அவர் தமிழ் எழுத்துவடிவத்தை திருத்தியதை யாரும் ஏற்றுகொள்ளமுடியாது

அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? எந்த தமிழறிஞர் குழு அதனை அங்கீகரித்தது? இப்படி ஆளாளுக்கு தமிழை திருத்தினால் என்னாகும் என்ற கேள்வி அப்பொழுது எழவே இல்லை

நிச்சயம் அப்படி ஒரு எதிர்ப்பு வந்திருந்தால் தமிழின் வடிவம் மாறி வந்திருக்காது, பாரம்பரிய தமிழ் கிடைத்திருக்கும்

தமிழ்மீது பற்றே இல்லா இச்சமூகம் அதனை கண்டுகொள்ளவில்லை , அக்காலத்தில் தமிழ் வாசிக்க தெரிந்தவர் குறைவு தமிழர் மொழி பேச்சு வழக்கிலே இருந்தது. வாசிக்க தெரிந்த பிராமணர் இதனை கண்டித்தபொழுது “ஏய் ஆரிய பார்ப்பண பாம்பே..” என பெரியாரின் அடிகள் சீறியதால் அவர்களும் அமைதி

அன்று பெரியார் எழுத்து வடிவ தமிழை கெடுத்ததை இன்று அவரின் முன்னாள் சீடரான கமல் இன்னும் கெடுக்க வந்திருக்கின்றார், அவர் பின்னாலும் பலர் அய்ய்ய் என அலைகின்றார்கள்

மெல்ல அல்ல, இனி தமிழ் உடனே சாகும்