மொகலாயர்கள் தமிழகத்தை ஆளவில்லை என திருச்சி சிவா சொல்வதெல்லாம் பெரும் அபத்தம்

மொகலாயர்கள் தமிழகத்தை ஆளவில்லை என திருச்சி சிவா சொல்வதெல்லாம் பெரும் அபத்தம்

வெள்ளையன் வரும்பொழுது டெல்லி பாதுஷாவின் தென்னக நிர்வாகியாக பிஜப்பூர் சுல்தான் இருந்தார், அவருக்கு அடியாளாக ஆர்க்காடு நவாப் இருந்தார்

நவாபிற்குத்தான் தென்னக பாளையகாரர்களான நாயக்கர்கள் வரி செலுத்தினர், கட்டபொம்மனும் அவரில் ஒருவர்

கிளைவ் ஆர்க்காடு நவாபிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையினை பெற்றபின்புதான் இங்கு சண்டையிட வந்தான் , அப்படியே வடக்கே மொகலாய மன்னரின் பிரநிதியான சுல்தானை பிளாசி யுத்தத்தில் வென்றுதான் இங்கு ஆங்கில சாம்ராஜ்யத்தை கட்ட ஆரம்பித்தான்

அப்படி சுல்தான்களை வளைத்து அவர்களிடமிருந்து வரிவசூலிக்கும் உரிமையினை பெற்ற ஆங்கிலேயர் கடைசியில் மொகலாயரின் கடைசி வாரிசான‌ பக்தூர் ஷாவினையும் வளைக்க இந்தியா அவர்கள் வசமானது

வெள்ளையன் வரும்பொழுது இந்தியா முழுக்க மொகலாய சாம்ராஜ்யமே நேரடியாக மறைமுகமாக ஆண்டது

அதனால் தமிழகம் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை இல்லை என திருச்சி சிவா கம்பு சுற்றுவது எல்லாம் திமுகவினர் மட்டும் ரசிக்கலாம்

அலாவுதின் கில்ஜியின் ஆட்சி கொஞ்ச நாள் இருந்திருக்கின்றது, பின் நாயக்கர் மராட்டியர் ஆட்சி இருந்திருகின்றது

பின் மொகலாய சாம்ராஜ்ய மறைமுக ஆட்சி இருந்திருகின்றது

பின் டெல்லி ஆட்சி போய் லண்டன் ஆட்சி வந்திருக்கின்றது

லண்டனும் டெல்லி வழியாகவே ஆண்டிருக்கின்றது

ஆக டெல்லிக்கும் தமிழகத்திற்கும் அன்றே ஆட்சி சிக்கல் இருந்திருக்கின்றது.