மோடிக்கு இதைவிட பெரும் அவமானம் இல்லை…
ஈரானின் பெட்ரோல் ஏற்றுமதியினை 0 அளவிற்கு குறைத்தால் அது ஓடிவந்து காலில் விழும் என பகிரங்கமாக சொல்கின்றது அமெரிக்கா
“சார் பெட்ரோல்ன்னு இல்ல, தண்ணி இல்லண்ணா கூட பொழைச்சிக்குவான் இந்த ஈரான், ரொம்ப கெட்ட பய சார் அவன்” என சவால் விடுகின்றது ஈரான்
அரபுலகில் அது ஷியா நாடு என ஒதுக்கபட்டாலும் உலகளவில் அதற்கான ஆதரவு இருக்கின்றது
ஐரோப்பிய நாடுகள் பல ஈரான் பக்கம் நிற்கின்றது, ரஷ்யா பகிரங்கமாக ஆதரிக்கின்றது
துருக்கி ஈரான் எம் சகோதரன் என்கின்றது
அமெரிக்காவின் எண்ணம் முழுக்க ஈடேறுவதாக தெரியவில்லை, ஈரானிடம் எண்ணெய் வாங்காதே என அமெரிக்கா சொன்னால் உன் சோலியினை பார் என பல நாடுகள் சவால் விடுகின்றன
மிக சிறிய நாடான எஸ்தோனியா தான் அமெரிக்க உறவில் இருந்து விடுபடுவதாக சொல்லி அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருப்பது ஐரோப்பிய சலசலப்பு
ஆனால் உலகின் இரண்டாம் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா அமெரிக்காவிற்கு பணிகின்றது
இது ஈரானுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தி இருக்கின்றது, இது நல்ல விளைவுகளை தராது, பாகிஸ்தானை அடுத்திருக்கும் ஈரானை பகைப்பது இந்திய பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல
இங்குதான் ஆளாளுக்கு மோடியினை கலாய்கின்றார்கள் என்றால், ஈரானும் மோடியினை கலாய்க்க ஆரம்பித்தாயிற்று
இந்தியாவின் வெளியுறவு கொள்கையினை முடிவு செய்வது யார்? மோடியா டிரம்பா என அது அதிரடியாக கேட்கின்றது
“ஏண்டா டேய், உனக்கு தன்மானம் சுயமரியாதை என எதுவுமே இல்லையா?..” என்ற செவிட்டில் அடிக்கும் கேள்வி அது
மோடிக்கு இதைவிட பெரும் அவமானம் இல்லை…
கஜினியும் கோரியும் மாலிக்காபூரும் கூட ஆலயத்தை கொள்ளை அடித்தார்களே தவிர சிலையினை தொடவில்லை
அவர்களை விட கொடியவர்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள்