மோடிக்கு வழிவிட்டு மகா அமைதியாக ஒதுங்கிய அந்த அத்வாணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image may contain: 1 personநிச்சயம் அந்த ராம் ஜென்மபூமி எல்லாம் தொடக்கத்தில் பிரச்சினையே அல்ல‌

இஸ்லாமியர்கள் மசூதி அருகேத்தான் இந்து ஆலயமும் இருந்திருக்கின்றது, ஒரு சர்ச்சையுமில்லை

இந்நாட்டில் மதவிவகாரங்களை வெள்ளையன் கையில் எடுத்த நாளிலே அந்த ராம் ஜென்ம பூமி கிளப்பிவிடபட்டது

பின்னாளில் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் அது அணைத்திருக்கலாம் ஆனால் அணையவிடாமல் காத்ததில் அத்வாணி பங்கு மகா முக்கியம்

பின்னாளில் அந்த மசூதி இடிக்கபட்டபொழுது அவரும் காரணம் என்ற சர்ச்சை இன்றுவரை உண்டு

அந்த பெரும் சர்ச்சையினை தாண்டி அத்வாணியிடம் ஒரு சில குணங்கள் உண்டு

முதலாவது சீனபோர் முதல் எல்லா விஷயங்களிலும் அவர் மிக உறுதியாக நாட்டுபற்றோடு நின்றார் அது மறக்கமுடியாதது, காஷ்மீர் பிரச்சினையில் அவரின் நிலைப்பாடு உறுதியானது

எந்த பிரிவினைவாதியினையும் அவர் ஆதரித்ததில்லை, எதிர்கட்சி காங்கிரசாயினும் ஈழவிவகாரத்தை எல்லாம் அரசியல் ஆக்கவில்லை. அது கவனிக்கதக்கது.

உயிருக்கு கடும் அச்சுறுத்தல் இருந்தாலும் அவர் எங்கும் அஞ்சியதாக தெரியவில்லை, தமிழகத்தில் கூட மயிரிழையில்தான் தப்பினார்

அத்வாணியிடம் இருந்த மிக நல்ல விஷயம் கட்சியில் எல்லோரையும் வளர்த்துவிடுவது

வாரிசு அரசியலோ இல்லை எல்லாம் தான் தான் என்ற ஒரு லகானோ அவரிடம் இல்லை

அப்படி அத்வாணி நினைத்திருந்தால் அந்த கட்சி வளர்ந்திருக்காது, மோடி அசுரபலத்தோடு வலம் வந்திருக்க மாட்டார்

அத்வாணி அரசியல் சர்ச்சைய்குரியது, ஆனால் நல்ல கட்சி தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்ற அந்த பண்புக்கு அண்ணா போலவே அத்வாணி பெரும் உதாரணம் என்பதை மறுக்க முடியாது

வெறும் சங்கமாக இருந்த பாஜகவினை இவ்வளவு பெரும் அசுர சக்தியாக்கிவிட்டு மோடிக்கு வழிவிட்டு மகா அமைதியாக ஒதுங்கிய அந்த அத்வாணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்