மோடிக்கு வியூகம் வகுத்த அந்த கமிட்டிக்கு சல்யூட்
அனிதா தற்கொலை , நீட் தேர்வு, தமிழிசை & கோ விவகாரம், ஜிஎஸ்டி விவகாரம், திரையுலகினர் கொதிப்பு
இன்னபிற ஏராளமான சர்ச்சைகள் மோடி அரசு மீது இருந்தன
நிச்சயம் அவர் சென்னை வரும்பொழுது அந்த பிரச்சினை வெடித்திருக்க வேண்டும், கருப்புகொடி காட்டபட்டிருக்க வேண்டும்
பெரும் எதிர்ப்புகள் கொடுக்கபட்டிருக்க வேண்டும், ஆனான பட்ட நேரு சென்னையில் உற்சாகாமாக கைகாட்டியபொழுது கருப்புகொடி காட்டி முகத்தில் அடித்த திராவிட கட்சிகள் உள்ள மாநிலம் இது
இந்திரா காந்தியினையே ரத்தம் சொட்ட அடித்துவிரட்டிய திராவிட பூமி இது
இதில் மோடி எப்படி மரியாதையாக வந்து போவது என யோசித்திருக்கின்றார்கள்?
கார்ட்டூன் பாலாவினை போட்டு சாத்தியதிலும், தமிழகத்து தென் மூலையில் ஒரு வழக்கறிஞரை போட்டு சாத்தியதிலும் இந்திய எதிர்ப்பாளர்கள், பிரிவினைவாதிகள், போராளிகள்
எல்லாம் அமைதி
ஒரு எதிர்ப்பு வந்ததா? அனிதா படம் எழும்பியதா? நெடுவாசல் விவகாரம் வந்ததா ஒன்றுமேயில்லை, உபயம் பாலா
அதன் பின் கலைஞரை சந்தித்ததில் மொத்த தமிழக கவனமும் எங்கோ போயிற்று.
கலைஞர் என்ற மனிதர் மோடிக்கு அட்டகாசமாக உதவியிருக்கின்றார்.
ஆக தன் மீதான சர்ச்சைகளை துடைத்தெறிந்து, அட்டகாசமாக தமிழகம் வந்துவிட்டு திரும்பியிருக்கின்றார் மோடி, எங்கும் எதிர்ப்பில்லை, ஆர்ப்பாட்டமில்லை
இவையெல்லாம் மிக துல்லியமான திட்டங்கள், மிக அழகான அரசியல் கணக்குகள்
அதனை வகுத்துகொடுத்த மூளை சாதாரணம் அல்ல, இன்னும் என்னென்ன திட்டங்களை எல்லாம் வைத்திருக்கின்றதோ தெரியவில்லை
மிகபெரும் தந்திரத்தோடு நகர்கின்றார்கள்
காங்கிரஸ் தமிழகத்தில் செய்ய தவறியதை எல்லாம், மிக கவனமாக செய்து காய் நகர்த்துகின்றது பாஜக
ஒரு வகையில் பார்த்தால் வீரமணி, சைமன், திருமுருகன் காந்தி முதல் வடை தமிழ்நாடு கேட்டவன் வரை பொடரியில் அடித்தது போல கம்மென்று இருக்கின்றார்கள், அது பாராட்டதக்கது
மோடிக்கு வியூகம் வகுத்த அந்த கமிட்டிக்கு சல்யூட்