மோடி அரசிலே எல்லாம் வெளி வருகின்றன…
என்ன சொல்லுங்கள், ஆயிரம் குற்றசாட்டுகளை சுமத்துங்கள் ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டுகொள்ளாதது போல் இருப்பது சரியல்ல
பொதுதுறை வங்கியில் இத்தனை தொழிலதிபர்கள் மோசடி செய்திருக்கின்றார்கள் எனும் விஷயங்கள் இப்பொழுதுதான் வருகின்றன
முன்பெல்லாம் மோசடிகள் நடந்தால் ஹர்ஷத் மேத்தா போல புரோக்கர்கள் இன்னும் சில திடீர் பணக்காரர்கள் மாட்டுவார்கள்
ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும் தலைகள் உருளுகின்றன, 10 வருடம் முன்பு ஏன் 5 வருடம் முன்பு கூட உங்களுக்கு இந்நிலை வரும் என்றால் மல்லையாவோ, நீரவோ வாய்விட்டு சிரித்திருப்பார்கள்
ஆனால் வந்திருக்கின்றது
வெளிவரும் விஷயங்களை கண்டால் இவை எல்லாம் மோடி காலத்தில் தொடங்கியவை அல்ல, கால காலமாக நடந்திருக்கின்றன, சில தலைமுறையாக கூட தொடர்ந்திருக்கலாம்
ஆனால் மோடி அரசிலே இவை எல்லாம் வெளிவருகின்றன. ஆக இன்னொரு நோக்கில் பார்க்க போனால் கருப்புபணம் ஒழிப்பு , மோசடி தொழிலதிபருக்கு கிடுக்குபிடி என மோடி அரசு இறங்கியதன் இன்னொரு விளைவாகவவும் கருத வேண்டி இருக்கின்றது
தொழிலதிபர்கள் எப்படி தப்புகின்றார்கள் என்பது வேறு விஷயம், இந்நாட்டின் சட்டங்கள் அவர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு. அச்சட்டங்களை மாற்றாமல் ஏதும் செய்ய முடியாது
போபால் ஆண்டர்சன் ராஜிவ் காலத்தில் தப்பி சென்றது இன்றுவரை பெரும் களங்கமே,
சட்டங்களும் பணக்கார தொழிலதிபருக்கான சில சலுகைகளும் அப்படி, அவைகளும் மாற்றபட்டாக வேண்டும்
எனினும் சில விஷயங்களை ஒப்புகொண்டாக வேண்டும் , அப்படியாக இத்தனை காலமும் தப்பிய முதலைகள் இப்பொழுது சிக்குகின்றன என்றால் இந்த அரசு ஏதோ செய்கின்றது என்றே பொருள்
நாட்டில் நல்லது நடந்தால் வரவேற்கத்தான் வேண்டும்