மோடி ஆட்சியினை விடவா நம்ம பொருளாதார தடை இந்தியாவ பாதிச்சிரும், யோசிங்கய்யா..”

மோடிக்கு நிதின் கட்காரி , ராஜ்நாத் சிங் போல இந்த டிரம்பானவருக்கு வலது கை, இடது கை, அல்லக்கை எல்லாம் மைக் பாம்பியோ

அவர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளார் , முன்னாள் சிஐஏ தலைவரும் கூட‌

அதாவது அமெரிக்க அதிபருக்கு அடுத்த சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்

பத்தாண்டு காலம் அரேபிய அமைதியினை நிர்ணயித்தவர் இவர், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா செய்த அனைத்து காரியங்களுக்கும் சூத்திர கர்த்தா.

இவர் அதிரடியாக சென்று பார்த்தபின்புதான் வடகொரிய அதிபரே அலறி அடித்து அணுகுண்டை எல்லாம் தூக்கி போட்டு சமத்து பிள்ளையானார், அப்படிபட்ட அதிரடியான மனிதர்

மிகபெரும் திட்டம் இல்லாமல் அன்னார் வெளிவருவதில்லை அதைவிட முக்கியம் மாபெரும் விவகாரம் இல்லாமல் அவர் இன்னொரு நாட்டுக்கு விமானம் ஏறுவதுமில்லை

அப்படிபட்ட மாய மனிதர் இன்று இந்தியா வருகின்றார், எதற்காக வருகின்றார்?

சும்மா மோடியினை கட்டிபிடிக்க என அவர் சொல்லி கொண்டாலும் ஈரானில் இருந்து இந்தியா வாங்கும் எண்ணெய் விவகாரம், ரஷ்யாவிலிருந்து இந்தியா வாங்கும் ஏவுகனை தடுப்பு சாதன விவகாரம் நிச்சயம் இடம்பெறும்

இவரின் சந்திப்பிற்கு பின் இந்தியா இவ்விவகாரத்தை தொடர்ந்தால் இந்தியாவின் வெற்றி, மேற்கண்ட விஷயத்தை நிறுத்தினால் அமெரிக்காவின் வெற்றி

இந்தியா நிறுத்த மறுத்தால் அது பொருளாதார தடையாக மாறலாம்

பார்க்கலாம், இந்த சந்திப்பு உலக முக்கியத்துவம் பெருகின்றது

மோடி “வல்லவராயனே நான் வாழவேண்டுமய்யா..” என காலில் விழுகின்றாரா இல்லை “மாமனா மச்சானா மானம் கெட்டவனே..” என வசனம் பேசுகின்றாரா என்பது விரைவில் தெரியும்

ஒருவேளை இந்தியா வழிக்கு வராவிட்டால் என்னாகும், பொருளாதார தடை விதிப்பது பற்றி அமெரிக்கா விவாதிக்கும்

அங்கு என்ன பேசுவார்கள், வீ.கே ராமசாமி ஸ்டைலில் டிரம்ப் சொல்வார்

“பிளடி அங்க என்ன வாழுது? அவனுக ரூபாய் கீழே போய்ட்டே இருக்கு, இதுக்கு நாம பொருளாதார தடை போட்டுத்தான் அவனுகள நாசமாக்கணுமா

அவனுகளே ஆயிக்குவானுக, வேணும்னா ஒண்ணு செய்வோம், மோடி வல்லவர் நல்லவர்னும் நம்ம டைம் பத்திரிகை , இன்னும் ஏக பத்திரிகையில எழுத வைப்போம்

பார்த்துட்டு இந்தியா நம்பி அவரையே பிரதமராக்கட்டும், நாம பொருளாதார தடை போடாமலே இந்தியா நெருக்கடில சிக்கி நம்ம கிட்ட வரும்

மோடி ஆட்சியினை விடவா நம்ம பொருளாதார தடை இந்தியாவ பாதிச்சிரும், யோசிங்கய்யா..”