மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது என்றார்கள்

மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது என்றார்கள், யார் ஆட்சியில் உயரவில்லை. அது அப்படித்தான் உயர்ந்துகொண்டேதான் போகும்

பாஸ்போர்ட்டுக்கான தொகையினையும் கணிசமாக உயர்த்திவிட்டார்கள், இந்திய தூதரக வாசலில் அவனவன் கதறுகின்றான்

வெளிநாட்டுக்கு செல்பவன் எல்லாம் அள்ளுபவன் அல்ல, கூலி வேலைக்கு செல்பவர்களும் ஏராளம். அவர்களை எல்லாம் கணக்கில் கொள்வதில்லை

பத்துவருடத்திற்கு ஒருமுறைதான் செலவு என்பதால் சகிக்கலாம் எனினும் இவ்வளவு அதிகரித்தரிக்க கூடாது

கேட்டால் பாதுகாப்பு அம்சங்கள் சேர்த்திருக்கின்றார்களாம், என்ன பாதுகாப்போ தெரியவில்லை

வெளிநாட்டில் தூதரகம் நடத்தவும் பெரும் செலவு செய்ய வேண்டும் என்பதால் தொகையினை அதிகரித்திருக்கலாம்

பாதுகாப்பு அம்சம் இருக்கட்டும் , இந்த தொகைக்கு தங்கத்திலே பாஸ்போர்ட் கொடுக்கலாம். அப்படி கொடுத்தால் அவசரத்திற்கு அடகு வைக்கவாவது வசதியாக இருக்கும்