மோடி இப்பொழுது வடகொரிய அதிபர் அளவுக்கு அஞ்சி ஒடுங்குவது வரலாற்று சோகம்
சும்மாவே பாராளுமன்றம் வருவதே இல்லை, பத்திரிகையாளரை சந்திப்பதே இல்லை
இனி ஏதும் சொன்னால் ஆப்கனின் மசூத் அசாத் என்பவரை பத்திரிகையாளர் பாணியில் தீவிரவாதிகள் கொன்றனர் , ஜூலியஸ் சீசரை அவர் அமைச்சர்களே கொன்றனர் என சாக்கு சொல்ல மிக்க வசதியாக இருக்கும்
இதையே இனி காரணமாக சொல்லி ஆளில்லா தீவில் அன்னார் சென்று இருந்துகொண்டாலும் ஆச்சரியமில்லை
உங்களுக்கு காஷ்மீரிய, பஞ்சாபிய, அசாமிய தீவிரவாதிகளால் ஆபத்து, உமா மகேஸ்வரன் முதலான ஈழபோராளிகளால் ஆபத்து என சொல்லியும் மிக தைரியமாய் மக்களை சந்தித்த ராஜிவும்
உங்கள் மெய்காப்பாளர்களை மாற்றுங்கள் என உளவுதுறை சொல்லியும் அவர்களை மாற்றாமல் மகா தைரியமாக இருந்து எதிர்கொண்ட இந்திராவும் நினைவுக்கு வருகின்றார்கள்
மோடி இப்பொழுது வடகொரிய அதிபர் அளவுக்கு அஞ்சி ஒடுங்குவது வரலாற்று சோகம்
மிரட்டல் எதிரொலி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: செய்தி
சும்மாவே தமிழ்நாட்டு பக்கம் போனா கருப்புகொடி காட்டுறானுக, கன்னட பக்கமும் பிரயோசனமில்ல. சிவசேனாவும் திட்டுது, சந்திரபாபு நாயுடு செருப்பால அடிக்க வாராரு, கேரளா கேட்கவே வேண்டாம்
வடக்கேயும் நிலமை சரி இல்ல, சரி வெளிநாட்டுக்கு போயிரலாம்னா, இனி அடிக்கடி வரகூடாது எங்களுக்கு வேலை இருக்குண்ணு எல்லா பயலும் சொல்றான்
இனி எனக்கு பாதுகாப்பு முக்கியம் , எங்கேயும் போக முடியாதுண்ணு இதையே சாக்கா வச்சி வீட்டோட இருந்திரலாம்னு இருக்கேன்”