மோடி இவர்களை சந்திக்க கூடாது, கூடவே கூடாது ..

பெரும் குற்றசாட்டில் தமிழக அரசு சிக்கியிருக்கின்றது, மாநிலத்தின் அமைச்சர்களே வருமானவரி சோதனையில் சிக்கியிருக்கின்றார்கள்

ஒரு இடைதேர்தலில் கொட்டிய பண மழையின் திகைப்பில் தேர்தல் ஆணையமே தேர்தலை நிறுத்தியிருக்கின்றது

இப்படியும் ஊழல் நடக்குமா? , இப்படியும் ஒரு மாநிலமா, இங்கு எப்படி மக்கள் இருக்கின்றார்கள்? அவர்கள் எல்லாம் ஜனநாயக நாட்டு மக்களா? இல்லை இன்னும் 1000ம் ஆண்டு பின்னால் இருக்கின்றார்களா என எல்லா மாநிலமும் காரிதுப்ப, உலகமே வேடிக்கை பார்க்கின்றது

இந்த மாநில அரசை கண்டிக்க்க துப்பில்லாமல், ஆற்று மணல் கொள்ளையில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி சம்பாதித்த அரசினை அந்த பணத்தில் எத்தனை சதவீதம் ஆற்றுக்கு செலவழித்தீர்கள்? எத்தனை சதவீதம் விவசாயிக்கு செலவழித்தீர்கள் என கேட்காத இந்த விவசாயிகள்

டெல்லியில் சென்று மோடி ஒழிக என சொல்வார்களாம், இதனை ஆதரிக்காதவன் தமிழக விவசாயி இல்லையாம்

இவர்கள் விவசாயி எனும்பெயரில் மாநில அரசினை தற்காத்து கொண்டிருக்கும் ஒரு சுயநல கும்பல், இதனை உண்மை உணர்ந்த எந்த தமிழனும் ஆதரிக்கமாட்டான்

அதனால் உண்மை புரிந்தவர்கள் இருங்கள், உண்மை புரியாமல் என்னிடம் வந்து ஏதும் சொல்லிகொண்டிருக்க வேண்டாம்

அமைதியாக சிந்தித்தால் உங்களுக்கே உண்மை புரியும்

இந்தியா முழுக்க வறட்சி, ஆனால் எந்த மாநில விவசாயியும் டெல்லிக்கு படையெடுக்கவில்லை, ஆனால் தமிழக விவசாயிகள் மட்டும் டெல்லிக்கு படையெடுப்பார்களாம்

மோடி இவர்களை சந்திக்க கூடாது, கூடவே கூடாது

அப்படி சந்தித்தால் நாளை பத்தாம் வகுப்பு பெயிலான பையன்கள் எல்லாம் டெல்லி சென்று கேள்விதாள் மிக கடினம், மோடி எங்களுக்கு பதில்சொல்ல வேண்டும் என கொடிபிடிப்பார்கள்

இந்த கோவணண்டிகள் சென்னையில் ஒரு குதித்துவிட்டு, டெல்லி சென்று பல்டியடித்தால் அது நியாயம், அது ஒரு அனுதாபம்

இவர்கள் செய்வது ஒரு மாதிரி அரசியல், இந்த கும்பலை அப்படியே தூக்கி கண்டெய்னரில் போட்டு சென்னைக்கு அனுப்பவேண்டும்