மோடி என்னைவிட சிறந்த நடிகர் : பிரகாஷ் ராஜ்

மோடி என்னைவிட சிறந்த நடிகர் : பிரகாஷ் ராஜ்

அன்னாருக்கு என்ன ஆயிற்றென்று தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் அரசியல் நிறைய பேசுகின்றார்.

யார்தான் அரசியல் பேசவில்லை எல்லோருமே பேசுகின்றார்கள். பேசட்டும்

மோடி இந்நாட்டிற்கு ஏதோ செய்ய நினைக்கின்றார். அதன் விளைவுகள் பின்னர்தான் தெரியும் என்றாலும் சில விஷயங்களில் அவரது அணுகுமுறை நன்றாகத்தான் இருக்கின்றது.

சீனாவுடன் போரை தவிர்த்தது, பாகிஸ்தானை அமெரிக்காவிடம் இருந்து தனிமை படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றது. அரபு நாடுகள் எண்ணெய் சந்தையில் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என நிற்கும்பொழுது வரலாற்றின் முதல் முறையாக அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்கி அரபுநாடுகளை மிரள வைப்பது என பல விஷயங்கள் ஓகே தான்

இப்பொழுதெல்லாம் அவர் மீது வைக்கபடும் விமர்சனம், கருப்பு பண ஒழிப்பு தோல்வி என்பது, அதனால் பொருளாதாரம் படுத்துவிட்டது என்பது.

கருப்பு பண ஒழிப்பு என்றால் ரூபாய் செல்லாது என்றவுடன் பதுக்கிய எல்லோரும் கொண்டு கொட்டுவார்கள் என்பதல்ல, அவனவன் பதுக்கிய தொகையினை ஒருநாளும் சொல்லமாட்டான்

ஆக பதுக்கிய கருப்புபணம் செல்லாதது ஆகிவிட்டது. ஒருவன் 100 கோடி பதுக்கியிருந்தால் அவனுக்கு தன் தொழிலைபற்றி கனவு இருந்திருக்கும். 100 கோடி செல்லாது என்றால் அவன் அடுத்த முதலீடு எப்படி செய்வான்?

ஆக அந்த பணத்திற்கு எதிர்காலம் இல்லாதபொழுது அவனின் தொழில் பாதிக்கத்தான் செய்யும்.

முறையான பணத்தில் தொழில் நடந்திருந்தால் அத்தொழில் மோடி நடவடிக்கையால் ஏன் பாதிக்கபட போகின்றது?

இப்படித்தான் பல தொழிலகள் படுத்துவிட்டன, இன்னொன்று ஜிஎஸ்டி போன்ற வரிமுறை அறிமுகபடுத்தி கொஞ்சகாலம் ஒரு சிறிய குழப்பம் வரத்தான் செய்யும், அது யார் ஆண்டாலும் வரும்.

கவனித்தால் கருப்பு பணத்தில் புரளும் ரியல் எஸ்டேட் , இன்னும் பல தொழில்கள் மற்றும் சினிமாக்காரர்களின் குரல்தான் இதில் அதிகமாக கேட்கின்றது

பாதிக்கபட்டவன் கத்ததான் செய்வான், எவ்வளவு கத்துகின்றானோ அந்த அளவு கருப்பு பண ஒழிப்பால் பாதிக்கபட்டிருக்கின்றான் என அர்த்தம்.