மோடி என்பவருக்கு நிச்சயமாக நேரம் சரியில்லை
மோடி என்பவருக்கு நிச்சயமாக நேரம் சரியில்லை. அதிர்ஷ்டவசமாக அவருக்கு தேர்தலில் அசுரபலம் வாய்த்தது, ஆனால் அமைச்சர்கள் அமரும் கட்டம் எல்லாம் சனிபகவான் அமர்ந்துகொண்டார்
அருண் ஜெட்லியினை தவிர சொல்லிகொள்ள கூடிய அமைச்சர்கள் அங்கு எவருமில்லை, சுஷ்மா சுவராஜூம் எதிர்பார்த்த அளவில்லை. அதிரடியாக பேசிகொண்டிருந்த ஸ்ருமதி ராணியும் டம்மியாக்கபட்டார்
மீதி இருக்கும் அமைச்சர்கள் வாயினை கஷ்டபட்டு பொத்திகொண்டிருக்கின்றார் மோடி, திறந்துவிட்டால் ஏய் இஸ்லாமியரே பாகிஸ்தான் போங்கள், அந்த மசூதியினை இடியுங்கள், பள்ளிகூடம் எல்லாம் பசுமாடு கட்டுங்கள் என்ற ரீதியில் பேச்சுவரும்
இந்நிலையில்தான் தமிழகத்தின் நிர்மலா சீத்தாராமனை அமர்த்தினார்கள், பெண் பிரதிநிதி, தமிழக வோட்டு கணக்கு எல்லாம் போட்டு அமர்த்தினார்கள்
அம்மணியும் தொடக்கத்தில் நன்றாக இருந்தார், இப்பொழுது அதளபாதாளத்தில் மோடியினை இழுத்துபோட்டு விழுந்துவிட்டார்
அந்த ராமேஸ்வர மீணவர் மீது இந்திய காவல்படை துப்பாக்கியால் சுட்டதாக வந்த சர்ச்சை அது
தொடக்கத்தில் இந்திய கடற்படை சுட்டது என்றார்கள், பயிற்சி என்றார்கள், பின் கடற்படை தடுத்தும் நிற்காமல் சென்றதால் சுட்டார்கள் என்றார்கள் ஏக குழப்பம்
இஸ்ரேல் இம்மாதிரி குழப்பும் நாடு, அதாவது தங்கள் அடையாளம் இல்லாமலோ அல்லது எதிரிநாட்டு அடையாளத்துடனோ எதிரி நாட்டுக்க்குள் புகுந்து சுட்டுவிட்டு அல்லது 4 குண்டு வீசிவிட்டு வருவார்கள்
ஆனால் இஸ்ரேலிய விமானம், கப்பல் என நிரூபிக்க முடியாமல் எதிர்நாடு திணறும்
இலங்கையும் அம்மாதிரி நடவடிக்கையில் இறங்கிவிட்டதோ என எல்லோரும் குழம்பிகொண்டிருந்தார்கள்
அப்பொழுது நிர்மலா சீத்தாராமன் அறிக்கை வெளியிட்டார், சுட்டது இந்திய படை அல்ல என்றும், அந்த தோட்டா இந்திய படை பயன்படுத்துவது அல்ல என்றும் அறிவித்தார்
குழப்பம் கூடிற்று
இந்நிலையில் இந்திய கமாண்டர் அது இந்தியா தோட்டாதான் என சொல்லிவிட்டார்
நிலமை பற்றி எரிகின்றது, ஒரு மிகபொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் இப்படி பொய் சொல்லி இருக்கின்றார் என்பதைவிட, தமிழக மீணவர் தாக்கபட்ட விவகாரத்தில் தமிழ்பெண்ணே பொய் சொல்லியிருக்கின்றார் என கேள்விகள் சீறுகின்றன
இந்திய பாதுகாப்புதுறை அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் சொல்லியிருப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்
நாளை எல்லை தகறாறு விஷயங்களில் இவர் சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள், இந்த அம்மணி சொந்த மக்களை சுட்டதையே இல்லை என்றவரல்லாவா என சொல்லி சிரித்தால் அவ்வளவுதான்
தன் நம்பகதன்மையினை தொலைத்துவிட்ட நிர்மலா சீத்தாராமன் இனி அதனை மீட்டெடுப்பது மிக கடினம்.
அவர் அப்பதவியில் நீடிப்பதும் சிக்கலே
(ஒருவேளை அது இந்திய தோட்டாதான், ஆனால் இந்திய துப்பாக்கியினை திருடி யாரோ சுட்டிருக்கின்றார்கள் என்றெல்லாம் சொன்னால் நிலமை இன்னும் மோசமாகும்)
ஆக மிக இக்கட்டான நிலையில் சிக்கிவிட்டார் நிர்மலா சீத்தாராமன், எப்படி தப்பிப்பாரோ தெரியவில்லை
அமைச்சர் பொறுப்பு என்பது கவனமாக பதிலளிக்க வேண்டியது, இஷ்டத்திற்கு அவசரபட்டு பேச அது ஒன்றும் பாஜக வட்ட செயலாளர் பதவி அல்ல
மகா மோசமாக தமிழக பாஜகவிற்கு தமிழகத்தில் பெரும் சிக்கலை உருவாக்கிவிட்டார்
ஏன் இப்படி சிக்கினார் நிர்மலா? பதவியே போகும் அளவிற்கு சிக்கிவிட்டார்?
பின்னே, கட்சிக்காக காகத்திற்கு நிகராக கத்தும் தமிழிசையினை விட்டுவிட்டு நிர்மலாவிற்கு பதவி கொடுத்தால் அந்த சாபம் சும்மா விடுமா என்ன?