மோடி சவாலை எதிர்கொள்கின்றார்.. அதில் வெல்ல வேண்டும் …
பிரிட்டன் வெளியேறும்பொழுது இந்த தேசத்தை முதலில் இரண்டாக பிளந்தார்கள், அத்தோடு இந்தியா இன்னும் உடையும் என்றார்கள்
இத்தேசம் நின்றது, நேரு மிகபெரும் தலைவனாக அறியபட்டார்
நேருவினை குறிவைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தூண்டிவிட்டார்கள் , இங்கு திமுகவும் பாகிஸ்தான் சீன போர்களும் நேருவினை பலவீனபடுத்தின
நேரு காலமானதும் இந்தியா உடையும் என்றார்கள், சாஸ்திரி அட்டகாசமாக தேசத்தை நிறுத்தினார்
ஆனால் அவரும் மர்மமாக இறந்தார், இத்தோடு இந்தியா காலி என்றார்கள்
இந்திரா மிக உறுதியாய் இந்திய அடையாளமானார், தேசம் நின்றது. அவரையும் நுட்பமாய் கொன்றார்கள், இனி இந்தியா சிதறும் என்றார்கள்
ராஜிவ் அகில இந்திய தலைவராக உருவானார், அவரையும் சரித்தார்கள்
அதன் பின் அகில இந்திய உறுதி தலைவன் என யாரும் வரவில்லை, அப்படி உருவாகிவிடாமல் பல உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பார்த்த்துகொண்டன
உள்நாட்டு குழப்பசக்திகளும் காரியத்தை சாதித்தன
மன்மோகன் போன்றவர்கள் நிர்வாகிகளாக இருந்தார்களே தவிர, தலைவர்களாக உருவாகவில்லை, அப்படி தலைவன் ஆனால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கும் புரிந்தது
இனி இந்தியாவில் தனிபெரும் தலைவன் வரப்போவதில்லை, தனிபெரும் கட்சி வரப்போவதில்லை என்ற நிலையில்தான் மோடி அகில இந்திய தலைவனாக உருவானார்
அதுதான் பலர் கண்களை உறுத்திற்று
மோடிக்கு எதிராக எல்லோரும் கரித்து கொட்டி, வரிந்து கட்டி நிற்க அதுதான் காரணம்
நல்ல இரும்பு தலமை இங்கு வரமுடியாது, வந்தாலும் நிலைக்க முடியாது. இதில் உள்நாட்டு சக்திகளுக்கும் மகிழ்ச்சி வெளிநாட்டு சக்திகளுக்கும் ஆனந்தம்
மோடி அத்தகைய சவாலை இப்பொழுது எதிர்கொள்கின்றார், அதில் வெல்ல வேண்டும்
அவர் இல்லையென்றால் இன்னொரு அகில இந்திய தலைவன் எழும்பிவரட்டும், அதுதான் தேசத்திற்கு நல்லது
அது ராகுலாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சி
மோடி மீது பல சர்ச்சைகள் இருக்கலாம், ஆனால் முழுவதுமாக அவரை ஒதுக்கமுடியாது. நாட்டிற்கு இப்படியான தனிபெரும் தலைவர்கள் கட்டாயம் தேவை