மோடி செய்தால் சத்தமே இருக்காது

Image may contain: one or more people and people standing

முன்பு எப்பொழுதோ அம்மன் சிலை அருகே குஷ்பூ செருப்போடு அமர்ந்துவிட்டார் என குதித்தார்கள், அதனை பெரும் பிரச்சினையாக மாற்றினார்கள், அம்மனை குஷ்பூ அவமரியாதை செய்துவிட்டார் என இந்துத்வா கும்பல்கள் கொடிபிடித்தன, கத்தி தீர்த்தன‌

விஷயம் பற்றி எரிந்தது, வழக்கு வரை போட்டு பாடாய் படுத்தினார்கள்.

இப்பொழுது மோடி செருப்புடன் பிள்ளையாரை வணங்கிகொண்டிருக்கின்றார் ஒரு சத்தமுமில்லை

அதாவது வேறு யாரும் செருப்பு அணிந்துகொண்டு ஆலயத்தில் வழிபாடே செய்யலாம், குஷ்பூ மட்டும் செருப்பு அணிந்துகொண்டு சினிமா மேடையில் கூட தெய்வ உருவின் அருகே அமர்ந்துவிட கூடாது, அது பெரும் குற்றம், விடமாட்டார்கள்

மோடி செய்தால் சத்தமே இருக்காது, இப்படியும் சிலருக்கு கொள்கைகள்

இதற்கெல்லாம் யாருன் அவமதிப்பு வழக்கெல்லாம் தொடுக்கமாட்டார்கள், அவர்கள் அவமதித்தால் அது அவமானமே அல்ல

(சிலர் உடனே இது தவறு, அவர் காலுக்கு உறை அணிந்துதான் சென்றார் என கொந்தளிக்கின்றார்கள்

கைக்கும், முகத்துக்கும் தேவைபடாத உறை காலுக்கு மட்டும் தேவைபடுகின்றதாம், நம்பிகொள்ளுங்கள், சாஸ்திரபடி காலுறை அணிவதும் தவறு என்பார்கள்

எல்லாம் இருக்கட்டும், ஆயிரம் சிக்கலில் நாடு இருக்கும்பொழுது இப்படி கோவில் கோலிலாக ஒரு பிரதமர் சுற்றுவதுதான் தேச சேவையா??)