மோடி, சோழர் பகுதி என சொல்லிவிட்டாராம் : பொங்குகிறார்கள் போராளிகள்

No automatic alt text available.

மோடி சென்னை பகுதியில் நடக்கும் ராணுவ கண்காட்சியினை சோழர் பகுதி என சொல்லிவிட்டாராம், ஆளாளுக்கு பொங்குகின்ரார்கள்

அதில் ஒன்றும் தவறல்ல.. அப்பகுதி என்ன? ஆந்திரம் வரைக்கும் சோழர்கள் ஆண்டார்கள்

தெலுங்கர்களுக்கும் அவர்களுக்கும் அன்றே பெரும் தொடர்பு இருந்திருக்கின்றது,

செங்கல்பட்டு சென்னை பக்கம் இருக்கும் பிரமாண்ட ஏரிகள் எல்லாம் சோழர்கள் உருவாக்கியது, மதுராந்தக சோழன் உருவாக்கிய மதுராந்தக ஏரி இன்றும் அவன் பெயரை தாங்கி நிற்கின்றது, இன்னும் ஏராளம் உண்டு

சோழ நாட்டு மக்களின் புண்ணிய பூமியில் திருக்காளத்தியும் திருவேங்கடம் எனும் திருப்பதியும் இடம்பெற்றிருக்கின்றன‌

திருக்காளத்தியினை மிக பெரும் ஸ்தலமாக சோழர் கொண்டாடியிருக்கின்றனர்.

இடையில்தான் பல்லவர்கள் வந்தார்கள், அவர்கள் பூர்வீகம் தமிழகம் அல்ல‌

பல்லவா என்பது பலம்பொருந்தியோரை குறிக்கும் ஈரானிய வார்த்தை, தமிழ் அல்ல‌

அந்த பல்லவர்களும் பெரும் அரசாகி ஆண்டார்கள், முதலாம் சோழ வம்சம் ஆண்டு இரண்டாம் சோழவம்சம் ஆளவந்த இடைவெளியில் ஆண்டார்கள்

பல்லவர்களும் சோழரை போலவே கடற்படையில் எல்லாம் கைதேர்ந்திருந்தார்கள், மகேந்திர வர்மன் போன்ற சில புகழ்பெற்ற மன்னர்களும் இருந்தார்கள்

மாமல்லபுரம் எல்லாம் அமைக்கபட்டதும், கடல்கடந்து அவர்கள் கம்போடியாவில் அங்கோர்வாட் கோவில் கட்டியதும் அக்காலத்தில்தான்

போதிதர்மன் எனும் பல்லவ இளவரசன் சீனா சென்று தாவோ என அழியா புகழ்பெற்றதும் இக்காலத்தில்தான்

பின் பல்லவ வம்சம் பலமிழக்க அப்பகுதி சோழர்கள் கையில்தான் மீண்டும் வந்தது. அதன் பின் டெல்லி சுல்தானிய படையெடுப்பிற்கு பின் நாயக்க மன்னர் ஆட்சிக்கு வந்தது

அதன் பின் பிஜப்பூர் சுல்தான், ஆற்காடு நவாப் என்றிருந்த காலங்களில் வெள்ளையர் வந்து செவிட்டில் 2 போட்டு பிடுங்கிகொண்டனர்

அதனால் இக்கண்காட்சி நடக்கும் பகுதிகள் சோழபூமியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை, பல்லவர்கள் இடையில் வந்துவிட்டு அப்படியே சென்றும் விட்டார்கள்

ராஜராஜ சோழன் கலிங்க படையெடுப்பின் காலங்களில் எல்லாம் இப்பகுதி சோழரிடமே இருந்தது

மோடி தெரியாமல் எல்லாம் சொல்லவில்லை, சொல்லிகொடுத்தவர்கள் மிக சரியாகவே சொல்லியிருக்கின்றார்கள்

மோடியினை விமர்சிக்க வேறு காரணங்கள் இருக்கலாம் , ஆனால் அது சோழர் பூமி என அவர் சொன்னது வரலாற்று உண்மை

காஞ்சி சென்னை பகுதி பல்லவர் பூமி என ஒரு ஆதாரம் காட்டுவீர்களானால், அது சோழர் பூமி என காட்ட 100 ஆதாரங்கள் உண்டு