மோடி தன் அன்னையின் 100ம் பிறந்தநாளில்

நேற்று மோடி தன் அன்னையின் 100ம் பிறந்தநாளில் அவர் பாதம் கழுவி நீர் அருந்திய காட்சி பலருக்கு ஆச்சரியமானது, சிலருக்கு நாடகமானது இன்னும் பலருக்கு ஆனந்தமானது

உண்மையில் இதனில் ஆச்சரியபடவோ, வியக்கவோ இல்லை நாடகம் என சொல்ல்வோ எதுவுமில்லை. மோடி ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு, அதன் பிரதான கொள்கை விவேகானந்தரை அப்படியே பின்பற்றுவது

சுவாமி விவேகானந்தர் தன் புகழ்பெற்ற அமெரிக்க உரையில் சொல்கின்றார்

“ஓ உலகத்தாரே, உலகில் இந்துக்கள் தங்கள் தாயினை பெருமைபடுத்தும் அளவு இன்னொரு மதம் பெருமைபடுத்திற்று என சொல்லமுடியுமா?

நாங்கள் காலையில் எழுந்ததும் எங்கள் அன்னையின் காலை நீரால் கழுவி பூஜை செய்வோம், அவள் காலை கழுவிய நீரினை அருந்திவிட்டுத்தான் அன்றாட கடமைகளை தொடங்குவோம்

எங்கள் இந்துமதம் அவ்வளவு உயர்ந்த தத்துவத்தை போதிக்கின்றது, தாயினை கழுவி வரும் நீரினை அருந்திவிட்டுத்தான் எம் தாய்நாட்டை கழுவி ஓடிவரும் நதிகளின் துளிநீரை அருந்திவிட்டு காரியங்களை தொடங்குவோம்

எம் மதம் தாய்க்கு கொடுத்திருக்கும் உயர்ந்த இடம் அது, எங்கள் இந்துபாரம்பரியத்தில் வழி வழியாக செய்துவரும் தாய் வழிபாடு இது

காலத்தின் கோலத்தால் ஆட்சி மாறி காட்சிகளும் மாறி நாங்கள் அறியாமையில் சிக்கியிருக்கின்றோம், ஒரு காலத்தில் இந்துக்கள் தங்களை யார் என்று உணரும்பொழுது உலகுக்கே நல்வழி காட்டுவார்கள்,இந்த உலகம் உன்னதமாக வாழும் வழிமுறைகள் எங்கள் தர்மம் ஒன்றில்தான் நிரம்பியுள்ளன”

ஆம், அதைத்தான் விவேகானந்தர் சொன்ன வார்த்தைகளைத்தான் நம் கண்முன் காட்டினார் நரேந்திர தத்தா எனும் விவேகானந்தரின் சீடரான நரேந்திர மோடி

நிச்சயம் அந்த தாய் இந்தியாவுக்கு ஒரு வரம், காமராஜரை முழுக்க புரிந்த சிவகாமி அம்மா போல மோடியின் தாய் பெரும் வரம்

அவள்மட்டும் தன் மகனை உலக சம்பாத்தியத்துக்கும், தன் வாரிசுக்கும் ஆசையிட்டு வழிமாற்றி இருந்தால் மோடியினை சாதாரண லவுகீகனாக மாற்றி இருந்தால் இந்நாடு இப்படி ஒரு தலைவனை கண்டிருக்காது

அந்த தாய் தன் மகனை நாட்டுக்காக தியாகம் செய்தாள், ஒரு தாய் தன் மகனை சன்னியாச கோலத்தில் விடுவதெல்லாம் எளிதில் சாத்தியமில்லை, நாட்டுக்கும் நாட்டு நலத்துக்கும் தன்னை அர்பணித்த ஒரு தாயால் மட்டுமே அதை செய்யமுடியும்

எதிரணியில் இருந்தாலும் தன் மகன் கர்ணன் வாழவேண்டும் என கெஞ்சியவள் குந்தி, தாய்பாசம் அப்படியானது

அந்த தாய் தன் மகனை நாட்டுக்கு விட்டுகொடுத்தாள், தன் நலம் தன் மகன் நலம் குடும்ப நலம் எல்லாம் தியாகம் செய்து முழு அன்போடு விட்டுகொடுத்தாள்

அவள்மட்டும் முட்டுகட்டை இட்டிருந்தால் இந்நாடு இப்படி ஒரு தலைவனை நிச்சயம் கண்டிருக்காது

அந்த தெய்வதாய் பட்டினத்து சுவாமிகள், ஆதிசங்கர சுவாமிகளின் தாய்மார்கள் போல ஒரு ஞானத்தாய், விவேகானந்தரின் அன்னை போல வரம்பெற்ற தாய்

நேற்று மோடி அந்த அன்னையின் காலை கழுவி தன்னை இந்திய இந்துவாக, இந்துக்களின் தர்மத்தை பின்பற்றுபவராக உலகுக்கு காட்டி நின்றார்

உயர்ந்த இடத்தில் இருப்போர் உலகுக்கு வழிகாட்ட வேண்டும், அதை சரியாக செய்தார் மோடி

நேற்று உலகம் முழுக்க அந்த காட்சி வைரலானது, ஜப்பான் முதல் அமெரிக்கா வரை ரஷ்யா முதல் அண்டார்ட்டிகா வரை எல்லோராலும் அறியபெற்ற அந்த மாமனிதன் இந்துக்களின் தர்மத்தை உலகறிய செய்தபொழுது வாயடைத்து நின்றது உலகம்

இந்துமதம் இப்படியெல்லாம் உன்னத போதனைகளை கொண்டதா என்ற கேள்வி உலகெல்லாம் எழுகின்றது

சுவாமி விவேகானந்தரின் போதனையும் எதிர்பார்ப்பும் உலகெல்லாம் மோடி வடிவில் எதிரொலிக்கின்றது

அன்று அடிமை இந்தியாவில் கந்தல் காவி உடை அணிந்து, செலவுக்கு கூட வழியில்லாமல் சென்ற பராரி விவாகனந்தர் தன் உரையால் அந்த அரங்கத்தை மட்டும் கவனிக்க வைத்தார்

இன்று இந்தியாவின் இந்து பிரதமராக அவரின் சீடர் மோடி உலகையே இந்து தர்மம் என்றால் என்ன என்பதை சொல்லி திரும்ப வைத்திருக்கின்றார்

அந்த பெருமகனை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும், அந்த அன்னையின் பாதநீர் பலருக்கு போகும் வண்ணம் தேசத்தின் பெரும் ஆறுகளில் தெளிக்கபடட்டும்

இந்து தர்மமும் அதன் மகோன்னதமான தாத்பரியங்களும் உலகில் மின்னதொடங்கியிருப்பது ஒவ்வொரு இந்துவும் பெருமைபட வேண்டியவிஷயம், மோடி எனும் பெருமகனால் அது சாத்தியமாயிருக்கின்றது