மோடி “தாடி வைத்த தங்கமே வருக” என வரவேற்கபடுவார்
தமிழகம் என்றெல்லாம் பொங்கும் என்றால் இங்குள்ள பிராதான கட்சிகளுக்கு டெல்லியில் பிடி இல்லாத காலத்தில் பொங்கும்
காமராஜர் செல்வாக்கு பெற்ற காலத்தில் அது பொங்கியது
பின் இந்திரா அசுர சக்தியாக ஆண்டபொழுது அது கொதித்தது
பின் இந்திராவுடன், ராஜிவுடன், விபிசிங்குடன் எல்லாம் பிராதான கட்சிகள் கூட்டணி வைத்திருந்தபொழுது அது அமைதியாயிற்று
அந்த அமைதி வாஜ்பாய், குஜரால், தேவகவுடா, மன்மோகன் சிங் என பல பிரதமர்களின் அவையில் தமிழர்கள் அமைச்சராக இருந்தபொழுது நீடித்தது
இப்பொழுது மோடி அசுர பலத்தோடு இருப்பதால் தமிழகம் மீண்டும் மிசா கால கொந்தளிப்பிற்கு சென்றுவிட்டது
இதே தமிழகம் அடுத்த தேர்தலில் மோடி ஆட்சியில் தமிழர் பங்குபெற்றால் மறுபடி அமைதியாகும்
டெல்லியில் தமிழக கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அவர்கள் நல்ல பிரதமர்கள், இல்லாவிட்டால் ஆகாத பிரதமர்கள்
இருந்து பாருங்கள், இன்னும் 6மாதமே. அதன் பின் காட்சிகள் எப்படி எல்லாம் எல்லாமோ மாறும்
இன்று தூற்றபடும் மோடி அப்பொழுது “இந்தியாவின் இரும்பு தலைவனே வருக”, “ஆடி மாத காற்றான மோடியே” “தாடி வைத்த தங்கமே வருக” என வரவேற்கபடுவார்.
எச்.ராசா, எஸ் வீ சேகர் எல்லாம் அப்பொழுது மறக்கபடுவார்கள்
மோடியோடு எல்லா தலைவர்களும் போஸ்கொடுத்து இந்தியா வாழ்க என சொல்லிகொண்டிருப்ப்பார்கள்
அதனால் இந்த மோடி கொந்தளிப்பு சர்ச்சை எல்லாம் மிக கொஞ்ச நாட்களுக்கே.
நேரு காலத்திலிருந்து தமிழக அரசியல் வரலாறு சொல்வது இதுதான்