மோடி பிரான்ஸில்
மோடி பிரான்ஸில் சில அதிரடிகளை காட்டி கொண்டிருக்கின்றார், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்த நிலையில் அமெரிக்க முகம் கறுக்கின்றது, காரணம் இந்தியாவின் மிகபெரிய எண்ணெய் தேவை ரஷ்ய ரூபிளின் மதிப்பினை நிறுத்தி தாங்கும் என்பது அமெரிக்க கணிப்பு
ஆனல் மலிவு விலை எண்ணெயினை இந்தியாவாலும் விட முடியாது
இப்படி சில முறுகல்கள் இருக்கும் நிலையில்தான் மோடி ஐரோப்பா சென்று ஐரோப்பிய யூனியனின் ஆதரவு இந்தியாவுக்கு இருப்பதை காட்டிகொண்டார்
இந்த கடும் யுத்த நிலையிலும் ரஷ்ய எண்ணெய் ஐரோப்பாவுக்குள் பாய்வதை மறைமுகமாக சுட்டிகாட்டிய மோடி, ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ஐரோப்பிய நாட்டுக்கொரு நீதி தங்களுக்கு ஒரு நீதி இருக்கமுடியாது என்பதையும் ம்றைமுகமாக சொல்லிவிட்டு அதே நேரம் ரஷ்யாவினையும் கண்டித்திருக்கின்றார்
ரஷ்யாவின் உக்ரைன் போர் ஏற்படுத்தியிருக்கும் மிகபெரிய சிக்கல் உணவுபொருள் தட்டுப்பாடு
இதனை பிரான்ஸும் இந்தியாவும் சேர்ந்து எதிர்கொள்ளும் என மோடி அறிவித்திருக்கின்றார், இது இந்தியாவின் விவசாய ஏற்றுமதிக்கு புதுவழி கொடுக்கும் குறிப்பாக கோதுமை சந்தையில் பெரும் திருப்பம் ஏற்படலாம்
இன்னொரு அதிரடியினை செய்திருப்பவர் அமித்ஷா
நாடெங்கும் சுற்றுபயணம் செய்யும் அமித்ஷா மேற்கு வங்கம் சென்று ஒரு நிகழ்வில் பங்கெடுத்திருக்கின்றார் அங்கு வங்க கவர்னர் அழைக்கபட்டிருக்கின்றார் ஆனால் மாநில முதல்வர் மம்தா அழைக்கபடவில்லை
அத்தோடு விடாமல் மம்தாவினை குறிவைத்து பேசியிருக்கும் அமித்ஷா விரைவில் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைபடுத்தபடும் என அறிவித்திருக்கின்றார்
ஒரு மாநிலத்தில் இந்திய உள்துறை அமைச்சர் கவர்னரை அருகில் வைத்து கொண்டு முதல்வருக்கு சவால் விடுவது ஒருமாதிரியான எச்சரிக்கை
சொல்லமுடியாது மேற்கு வங்க காட்சிகள் தமிழகத்திலும் நடக்கலாம்
இதே அமித்ஷா மே 22 வாக்கில் தருமை ஆதீனத்துக்கும் வரலாம் போலிருக்கின்றது, ஆதீனம் சார்பாக ஒரு அழைப்பு அமித்ஷாவுக்கு விடுக்கபட்டால் அவர் வராமல் போய்விடுவாரா என்ன?
தமிழ் நாட்டிற்கு நிச்சயம் வர வேண்டும்.. குடி உரிமை சட்டம் கண்டிப்பாக நடக்கும்!! நடந்தே தீரும் !!இதனால் யாருக்கும் பாதிப்பு அல்ல? சராசரி மனிதர்கள்ளுக்குஅல்ல!… சீக்கிரம் அந்த சட்டம் நிறைவேற்றபட வேண்டும்… அமித்ஷா ஜி செம கலக்கு கலக்குகிறார் ஒவ்வொரு விஷயத்திலும். சிறந்த சாணக்கியர்