மோடி “புதிய மியன்மார்” பிறக்க வைத்துவிட்டார்
“மியன்மாரில் நடப்பது இனபடுகொலை அல்ல, அவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் மேல் நடத்தபடும் நடவடிக்கையினை உலகம் மிகைபடுத்துகின்றது” : ஆங்சன் சூகி
உலக இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ரொஹிங்கியா விவகாரத்தை கையில் எடுத்து கண்டிக்க தொடங்கிவிட்டன, இஸ்லாமிய நாடுகளில் ஓரளவு வலுவான நாடான (பாகிஸ்தானை விடுங்கள், அது ஒரு அடிமை) துருக்கி அதிபர் போனில் சூகியிடம் கண்டிக்கும்பொழுதுதான் அம்மணி இப்படி பேசியிருக்கின்றார்.
எந்த ஆங்க்சன் சூகி?
பர்மாவில் மக்களாட்சி வேண்டும் என போராடி, பல வருடங்கள் சிறையிலிருந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்த அந்த சூகி.
உலக நாடுகள் அவருக்கு நோபல் பரிசும் இன்னபிற உயரிய விருதுகளும் கொடுத்து கவுரவபடுத்திய அந்த ஆங்க்சான் சூகியேத்தான் இப்படி பச்சைபொய் சொல்கின்றார்.
உண்மையில் ரொஹிங்கியா மக்களிடம் பெரும் ஆயுதம் ஏதுமில்லை, அந்த அபலைகள் மீதான மதவெறி தாக்குதலை நியாயபடுத்துகின்றார் சூகி.
பெரும் ராணுவத்தினை எதிர்த்து போராடிய அந்த சூகி, அரசியலில் வாக்குவங்கிக்காக புத்த குருக்களை எதிர்க்க மறுக்கின்றார்.
அரசியலில் இப்படித்தான் இருந்தாக வேண்டும் , யார் செத்தால் என்ன? என்றொரு நிலைக்கு அவர் தயாராகிவிட்டார்.
உலகம் இதனை மிகுந்த அதிர்ச்சியுடன் நோக்குகின்றது, இந்த நூற்றாண்டின் புரட்சி பெண்ணான சூகியா இப்படி மாறிவிட்டார் என மீளமுடியா அதிர்ச்சியில் இருக்கின்றது.
உலகம் அதிர்ச்சி ஆகலாம், ஆனால் நமக்கு அதிர்ச்சி ஏற்படவே இல்லை
காரணம் மோடி நேற்றுதான் மியன்மார் சென்று சூகியினை சந்தித்தார், போதாதா? மோடியின் தோஷம் சூகிக்கும் பசக்கென்று ஒட்டிகொண்டது.
ஆக மோடி “புதிய மியன்மார்” பிறக்க வைத்துவிட்டார்.