மோடி மஹாதீர் திடீர் சந்திப்பு
முன் கூட்டியே திட்டமிடாமல், ஒரு நாடு அழைக்காமல் வலிய சென்று “அய்யா நான் உங்க நாட்டுக்கு மேல் பறக்கின்றேன் , கொஞ்சம் இறங்கி உங்களை பார்க்கட்டுமா” என உலகிலே கேட்கும் ஒரே தலைவர் நமது மோடி ஒருவர்தான்
அப்படி இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும்பொழுது சட்டென மலேசியாவில் இறங்கி மகாதீரை சந்தித்திருக்கின்றார்
ஏன் சந்தித்தார் என்பதற்கு காரணம் தெரியவில்லை
“நாமெல்லாம் இனி செத்தாலும் ஆட்சிக்கு வரமுடியாது, ஒரு மனிதர் 22 வருடம் ஆண்டு மறுபடியும் 92 வயதில் பிரதமாகியிருக்கின்றார், பார்த்துவிட்டு கண்ணீரை துடைத்துவிட்டு போவோம்” என்ற பெருமூச்சாக இருக்கலாம்
“நான் பதவிக்கு வந்து 1 மாதத்திற்குள் சொன்னதை செய்கின்றேன், 4வருடமாக நீங்கள் ஒன்றுமே செய்யவில்லையா?” என மகாதீர் மோடியினை கேட்டால் நன்றாகத்தான் இருக்கும்.
“உங்கள மாதிரித்தான் நானும் 95 வயசுவரை பிரதமராக இருக்கணும்னு ஆசைபடுறேன், ஆனா இந்தியாவில ஒரு பயலும் விடமாட்டேங்குறாங்க
அதுக்கு நாட்டுக்கு ஏதாவது செய்திருக்கணும் மோடி, சும்மா வாய்சவுடால் விட்டுகொண்டிருந்தால் தேர்தலில் அடிதான் விழும்
அட போங்க அழுகையா வருது, நான் டீ வித்தவன், இப்பொல்லாம் ஒரு நாளைக்கு 21 மணிநேரம் நாட்டுக்காக உழைக்கிறேன், அது போக……
அது இருக்கட்டும் மோடி தூத்துகுடியில ஏதோ துப்பாக்கிசூடாமே?
அட அது இலங்கையில் உள்ள தூத்துகுடிங்க, இந்தியா இல்லை, உங்ககிட்ட யாரோ பொய் சொல்லிருக்காங்க””