மோடி ரஷ்ய பயணம்
உயிரே போனாலும் உண்மை பேசமாட்டேன் என ராமர்கோவில் மேல் சத்தியம் செய்திருப்பவர் மோடி, ரஷ்யாவிலும் அப்படி பேசியிருக்கின்றார்
உண்மையில் ரஷ்ய அதிபர்தான் இங்கு வந்திருக்க வேண்டும். காரணம் அவர்களுக்குத்தான் அவசியம்
இந்த ஈரானை சுற்றி ஆப்கன், பாகிஸ்தான் அரேபியா என அமெரிக்கா தன் கரங்களை வலுபடுத்தி பெரும் தாக்குதலுக்கு தயாராகும் நேரமிது. ஓசையின்றி பல தயாரிப்புகள் நடக்கின்றன
ரஷ்யாவும், ஐரோப்பிய யூனியனும் இதனை எதிர்க்கும் காலகட்டமிது. இந்தியாவிற்கு வந்து புட்டீன் ஆதரவு திரட்டியிருக்க வேண்டும் குறைந்தபட்சம் ரஷ்ய அமைச்சராவது வந்திருக்க வேண்டும்
ஆனால் “எல்லா நாட்டுக்கும் போகும் நீர் , எம்மண்ணுக்கு வரமாட்டீரோ? வாரும் வந்து கூடங்குள அணுவுலைக்கு கையெழுத்து போட்டுவிட்டு செல்லும்” என்ற தொனியில் ரஷ்யா சொல்ல ஓடியே சென்றுவிட்டார் மோடி
எங்கு ஓடினார், இங்கு லெனின் சிலையினை இடித்துவிட்டு அதே லெனின் பூமிக்கு ஓடினார். ரஷ்யர்கள் அதை கவனித்துகொண்டுதான் இருந்தார்கள்
அங்கு சென்றவர் சும்மாவா இருந்தார்? இந்த நூற்றாண்டின் பெரும் பொய்களை அவிழ்த்துவிட்டார்
ரஷ்ய உறவினை மிக விரும்பியவர் வாஜ்பாய், நான் அவரின் கனவினை நனவாக்கினேன் என ஏக அழிச்சாட்டியம்
உண்மையில் ரஷ்யாவுடன் இந்தியாவினை இணைத்தவர் இந்திரா, அதன் பின்னே ரஷ்ய உறவு பலபட்டு இந்தியா ராணுவம் முதல் விண்வெளிவரை பல சாதனைகளை படைத்தது
ரஷ்ய பிண்ணணியிலே வங்கப்போர் முதல் இந்தியா வெல்லமுடிந்தது
ராஜிவ் அதனை தொடர்ந்துதான் பல விஷயங்களை சாத்தியமாக்கினார்
அப்படிபட்ட இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்று வாஜ்பாயின் கனவு இது என மோடி சொன்னதை கேட்டு, அரசியலில் பழம் தின்று கொட்டையினையும் பாயாசம் வைத்த புட்டீன் கோஷ்டி சிரிப்பாய் சிரிக்கின்றது
“நம்மிடமே இப்படி அளக்கின்றாரே மனிதர், சொந்த நாட்டில் எப்படி எல்லாம் கதை கட்டுவார்” என சிரிக்கின்றது புட்டீன் கோஷ்டி