யாருக்கு வாக்கு?
இந்த தேர்தல் களத்தில் தமிழகத்தில் காங்கிரசுக்கு வாக்களித்தால் திமுகவுக்குத்தான் லாபம்
பாஜகவுக்கு வாக்களித்தால் அதிமுகவுக்குத்தான் லாபம்
இரண்டுமே சரியில்லை, ஒன்று ஊழல் இன்னொன்று ஊழலுக்கு காத்திருப்பது அவ்வளவுதான் விஷயம்
மீதி இருப்பவர்களை கவனித்தால் இந்தியாவினை விட்டே கிளம்ப சொல்லும் மனம்
இதில் எங்கிருந்து வாக்கு செலுத்துவது?
அகில இந்திய அளவில் தேசிய பாதுகாப்பு என கருதினால் பாஜகதான் தேர்வு, மிக நல்ல பாதுகாப்பினை கட்டி எழுப்ப பாடுபடுகின்றார்கள்
ஆனால் மற்ற விஷயங்களில் கடும் சறுக்கல். ராமர் கோவில் மாட்டுகறி இன்னும் பல அராஜகங்களுக்கு அவர்கள் மவுன துணை போவதை யாரும் ரசிக்க முடியாது
காங்கிரஸ் நல்ல கட்சிதான் ஆனால் வலுவாக இல்லை. நிச்சயம் கூட்டணியாக வந்து அமர்வார்கள், மந்திரி சபை வேட்டை நாய்களிடம் சிக்கிய மானாக படாத பாடு படும்
தனிமெஜாரிட்டியுடன் காங்கிரஸ் வந்தால் நல்லது, அவர்கள் ஆட்சியில் ஓரளவு பொருளாதார திட்டங்கள் வகுக்கபடும்
ஆக இரு கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும், தலைவி வேறு காங்கிரசில் இருக்கின்றார்
இருப்பதோ ஒரு வோட்டு நான் என்ன செய்வேன்?
“இரண்டு வோட்டு வேண்டும்
தேர்தல் கமிஷனிடம் கேட்பேன்.
பாஜக காங்கிரஸ் இரண்டானால்
திமுக அதிமுக இரண்டானால்
வோட்டுக்கு 2 ஆயிரம் என்றானால்
வோட்டு ஒன்று போதாதே……”