யாரை எதிர்த்து அணியபட்ட கருப்பு சட்டை?
அன்று பெரியார் பின்னால் கருப்பு சட்டை அணிந்தவர்களின் வாரிசுகள்தான் இவர்கள்
இன்று ஏதோ எதிர்ப்பை காட்ட மறுபடியும் கருப்பு சட்டை அணிந்துவிட்டார்களாம்.
இந்த சமூகம் திராவிடரை இழிவுபடுத்துகின்றது, அந்த இழிவு நீங்குமட்டும் எதிர்ப்பை தெரிவிக்க கருப்புசட்டை அணிவோம் என்றுதான் அணிந்தார்கள்
பின் திமுக தொடங்கும்பொழுது அரசியலுக்காக வெள்ளையாடைக்கு மாறினார்கள், வைகோ கருப்புதுண்டு அப்படி வந்ததுதான்
ஒருகாலத்தில் இவர்களின் அடையாளமாக இருந்த கருப்பு சட்டை , பிராமணரை எதிர்ப்போம் , ஆரியரை எதிர்ப்போம் என்ற அடையாளமாக கருதபட்ட கருப்பு சட்டை இன்று சொந்த சகோதர கட்சியினை எதிர்க்கும் அடையாளமாக வந்துவிட்டது திராவிட சோகம்
கலைஞர் இருந்தால் இதிலெல்லாம் மிக கவனமாக இருப்பார்
கருப்புசட்டையின் வரலாறு அதிமுகவினருக்கு தெரியாவிட்டால் ஆச்சரியமில்லை, இவர்களுக்கு தெரியாமல் போனதுதான் மகா ஆச்சரியம்
யாரை எதிர்த்து அணியபட்ட கருப்பு சட்டை, திராவிட கட்சி ஆட்சியிலே அணியபடுகின்றது என்றால் விவரம் அறிந்தவர்கள் சிரிக்கமாட்டார்களா?
அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரம் வழி இருக்க, திராவிட வரலாற்றின் அடையாளமான கருப்பு சட்டையினை இவர்கள் அணிந்துவந்தது அதனை கேவலபடுத்தியது போன்றதாகும்
நிச்சயம் ஒரு திராவிட இனமான உணர்வுள்ளவன் இருந்தால் (வீரமணியினை சொல்லவில்லை) இதனை கண்டித்திருப்பான். அப்படி யாருமே இல்லாததுதான் சோகம்