யார் கொடுத்திருப்பார்கள்?

இலங்கையில் தவுபிக் ஜமாத் தீவிரவாதிகளின் நடமாட்டம் யாழ்பாணத்திலும் இருக்க்கின்றது என்ற தகவலை அடுத்து வட இலங்கையினை முற்றுகையிட்டிருக்கின்றது இலங்கை ராணுவம்

காரணம் அங்கிருந்து இந்தியா தப்புவது என்பது எளிது

இதனால் ஒரு இடம் விடாமல் தேடியிருகின்றார்கள், யாழ்பாணம் கல்லூரியும் அதன் விடுதியும் தப்பவில்லை

அங்கு ஒருவன் கண்ணிவெடி துப்பாக்கி தோட்டா வெடிபொருள் சகிதம் சிக்கியிருக்கின்றான், அவன் அறையில் பிரபாகரனின் படமும் இருந்திருக்கின்றது

போதாதா? அணில் வேட்டைக்கு சென்று முயல் சிக்கிய கதையாக அவனை கொத்தி சென்றிருக்கின்றது இலங்கை ராணுவம்

மறுபடியும் புலிகள் தலையெடுக்கின்றார்களா? என அடுத்த பரபரப்பு ஆரம்பமாயிற்று

காரணம் புலிகளின் ஆரம்ப காலமும் இப்படித்தான் இருந்தன , இதனால் முதலிலே கிள்ளி எறிய அவனிடம் கடும் விசாரணை நடக்கின்றது

கண்ணிவெடி கொடுத்தது யார்? துப்பாக்கி குண்டு கொடுத்தது யார் என ஏக விசாரணை?

யார் கொடுத்திருப்பார்கள்?

எமக்கு தெரிந்து பிரபாகரனோடு இருந்து ஏகே 74ல் சுட்ட முதல் இந்தியன் அங்கிள் சைமனே, அவரே அப்படி சொல்லியிருக்கின்றார்

ஏகே 74 பயிற்சி பெற்றவர், கண்ணிவெடி பயிற்சி பெற்றிருக்கமாட்டாரா என்ன?