யார் வந்தால் நமக்கென்ன?

க‌ர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

அதானே, நீங்கள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டிலே என்ன நடந்தாலும் உங்களுக்கு சுத்தமாக கவலை இல்லை,

இதில் கன்னடத்தின் நடப்புகளா உங்களுக்கு கவலை தந்துவிடும்?


முன்பெல்லாம் அரசியலுக்கு ராஜாஜி, காமராஜர், கக்கன் , அண்ணா என வந்தார்கள்

இப்பொழுது ஆர்.ஜே பாலாஜி, ஜூலி என வருகின்றார்கள்

போகிற போக்கை பார்த்த்தால் செத்து போன குமரி முத்துவினை தவிர எல்லா துணை நடிகர்களும் தமிழக அரசியல் குதிப்பார்கள் போல‌

நாம் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்


மோசமான உணவுபொருளை பற்றி புகார் செய்ய வாட்சப் எண், கருர் மாவட்ட கலெக்டர் தகவல்

இது கரூர் மாவட்டத்திற்கு மட்டுமா? மொத்த தமிழகத்திற்கா?

தெரிந்தால், இந்த சாம்பார் வகையறாக்களை பார்க்கும்பொழுது புகார் கொடுக்க வசதியாயிருக்கும்