யார் வருவார்? தெரியாது .. ஆனால் ஒருவர் வருவார்

இருநாள் கூட ஆகவில்லை, ஆரம்பித்துவிட்டார்கள்

அதாவது ஜெயலலிதா அகங்காரம் என்ன தெரியுமா? அன்று டெல்லியினை வற்புறுத்தி கலைஞர் அரசினை கலைத்தது அவர்தான் என அழிச்சாட்டியம் தொடங்கியாயிற்று

கலைஞர் அரசு 1990ல் அன்று ஏன் கலைக்கபட்டது?

பத்மநாபா படுகொலையினை தொடர்ந்து ஏற்பட்ட அச்சம் அது, குற்றவாளிகள் அசால்ட்டாக தப்பினர். அதுவும் ரகசிய விசாரணையில் அகப்பட்ட சிவராசன் தப்பவிக்கபட்டான் என்ற செய்தியும் கசிந்தது

அதனை தொடர்ந்தும் புலிகள் நடமாட்டாம் பகிரங்கமாக இருந்தது

இந்திய அமைதிபடை 1500 வீரகளை இழந்து திரும்பிய வேளையில், இந்தியாவின் ஒரு மாநிலத்தில் அவர்கள் பெரும் படுகொலை நிகழ்த்தி தப்பி செல்லும் அவளவுக்கு இருப்பதை மத்திய அரசு எப்படி அனுமதிக்கும்?

இதனை தொடர்ந்தே கலைஞர் அரசு டிஸ்மிஸ் செய்யபட்டதும், அதனை தொடர்ந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராஜிவ் கொல்லபட்டதும்

இதன் பின்னே நடந்த விசாரணையில்தான் திமுகவிற்கு ராஜிவ் மேல் பகை இருந்ததா? எனும் கோணங்களில் எல்லாம் சென்று, பின் மர்மம் விலகியது

ராஜிவின் அகோர மரணமே ஜெயலலிதாவினை முதன்முறையாக ஆட்சியில் அமர்த்தியது

அதன் பின் நடந்ததுதான் விசித்திரம்

ஜெயா அதன்பின் காங்கிரசை விரட்டினார், ஒரு முறையேனும் அவர் திருப்பெரும்புதூரில் ராஜிவிற்கு அஞ்சலி செலுத்தினார் எனும் செய்தியினை யாரும் படித்திருக்க முடியுமா? நிச்சயம் இல்லை.

ஏன் நீங்கள் செல்லவில்லை என்பதற்கு டெல்லி காங்கிரசார் எம்ஜிஆர் சமாதிக்கு வருவார்களா? என சாடியவர் அவர்.

அதன் பின் காங்கிரசின் அடைக்கலம் கலைஞர் என மாறிபோனதுதான் விசித்திரம்.

கலைஞரின் சித்துவிளையாட்டில் தடுமாறிய எம்ஜிஆரை இந்திராவின் மரணம் காப்பாற்றி ஆட்சியில் அமர்த்தியது

ராஜிவின் மரணம் ஜெயாவினை ஆட்சியில் அமர்த்தியது

ஆக இரு வாய்ப்புகளையும் அதிமுகவிடம் கொடுத்துவிட்ட காங்கிரஸ், தலையில் துண்டினை போட்டு திமுகவுடன் அடைக்கலமானது

கலைஞர் அவர்களுக்கு தமிழக திமுக‌ திண்ணையில் இடம் கொடுத்தாலும், பின் அவர்களின் டெல்லி தர்பாரில் சாப்பாட்டு மேஜையில் இடம் பிடித்து கொள்வார், அது சமார்த்தியம்

தனக்கு முதன் முதலில் பதவி வழங்க காரணமாயிருந்த அந்த திரும்பெரும்புதூருக்கோ அந்த காங்கிரசுக்கோ முகத்தை திருப்பிகொண்டவர்தான் ஜெயா

கலைஞர் அரசு டிஸ்மிஸ்க்கு ஜெயா காரணமுமல்ல, அதே நேரம் காங்கிரசுக்கு நன்றிகடன் காட்டியவருமல்ல‌

பல இடங்களில் அவரை புரிந்துகொள்ளமுடியாது

ஆனால் ஒரு விஷயம் உண்மை, கலைஞரை சாடியே அவர் அரசியல் வாழ்க்க்கை இருந்தது, கலைஞர் எதிர்ப்புதான் அவர் கொள்கையின் பிரதானம்

பார்க்கலாம்

அண்ணா தொடங்கிய கட்சி கலைஞரால் வழிநடத்தபடுகின்றது

எம்ஜிஆர் அவசரகோலத்தில் தொடங்கிய கட்சி ஜெயவால் வழிநடத்தப்ட்டு இன்று மூன்றாம் தலைவருக்கு காத்திருக்கின்றது

யார் வருவார்? தெரியாது ஆனால் ஒருவர் வரவேண்டுமல்லவா வருவார்

(டேய் அது யார்டா .. அடுத்த தலைவன் சரத்குமார் என சொல்லிவிட்டு ஓடுவது….)