யாழ்பாணத்தில் ஒரு முருகன், மலேசிய பினாங்கில் இன்னொரு முருகனோ?

தைப்பூச ஊர்வலம் தொடர்பாக மலேசிய பினாங்கில் சில சர்ச்சைகள் வருகின்றன, அதாவது ஊர்வலம் எப்படி நடத்தப்டவேண்டும் என்ற விதிகள் உண்டு என இரு கோஷ்டிகளாக பிரிந்து சொல் வீசுகின்றார்கள்

இதில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாக வைகோ களமிறங்கி அறிக்கைவிட்டிருக்கின்றார் எப்படி?

இது ஆலயம் சம்பந்தமான விஷயம், அதன் புனிததன்மை காக்கபட வேண்டும், அப்படி இப்படி என ஏக முருகபெருமான் அறிவுரைகள்

இதே வைகோ, முன்பு யாழ்பாணத்தில் நல்லூர் முருகன் கோவில் வளாகத்தில் புலிகள் அவ்வளவு அட்டகாசம் செய்தபொழுதும், அந்த முகாமில் இருந்து இந்திய படைகளை தாக்கிய பொழுதும் ஏதாவது பேசினாரா?

அதே கோவில் முன்பு முன்பு கிட்டு எனும் புலி, ஒரு சிங்களன் காலை காட்சிக்கு வைத்தபொழுது மொத்த இந்து மக்களே அதனை கண்டித்தபொழுது இந்த வைகோ ஏதாவது சொன்னாரா?

யாழ்பாணத்தில் ஒரு முருகன், மலேசிய பினாங்கில் இன்னொரு முருகனோ?

ஒன்று புரிகின்றது

வைகோ முன்பு பகுத்தறிவுவாதி, இப்பொழுது அந்த பெரியார் கொள்கைகளை வீசிவிட்டு வேறு வேலைக்கு வந்துவிட்டார், அதில் சீமான் எனும் தொழில்போட்டியாளர் வேறு

இனி முருகன் விரைவில் வைகோவிற்கும் பாட்டன், சின்ன பாட்டன் ஆகலாம்.

சீமானுக்கு யாழ்பாண முருகன் படியளக்கும் பொழுது வைகோவிற்கு மலேசிய முருகன் படியளக்காவிட்டால் அவர் என்ன தமிழர் கடவுள்?