யூதர்கள் ஜெருசலேமினை திரும்ப பெற்ற நாள், இதே ஜூன் 7
அது 1967ம் ஆண்டு, இன்றைய ஈரான் போல அன்றைய எகிப்து மிரட்டிகொண்டிருந்தது. அந்த நாட்டின் அதிபர் நாசர் அரபுகளின் தலைவராய் இருந்தார்
அவருக்கு சோவியத்தின் ஆயுதங்கள் குவிந்து கிடந்தன, விமானம் மட்டும் 800க்கும் மேல் இருந்தது, அவர் ராணுவ வீரன் என்பதால் வியூகங்களை கவனமாக வகுத்தார்
இஸ்ரேலை எல்லா நாடுகளும் சுற்றி இருந்து தாக்கி கைபற்ற வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யபட்டது, எகிப்து, ஜோர்டார், சிரியா, ஜோர்டான், லெபனான், சதாம் இல்லா ஈராக் என பல நாடுகள் ஒன்று சேர்ந்தன
பிண்ணணி ஆதரவாக அல்ஜீரியா, பாகிஸ்தான், மொராக்கோ, குவைத், சவுதி, யுஏஇ, சூடான், மொராக்கோ, அராபத்தின் இயக்கம் என பல நாடுகள் இருந்தன
நிச்சயம் இஸ்ரேல் படை சிறியது, எதிரிகள் படை பெரியது
யுத்தத்தை எதிர்பார்த்த இஸ்ரேல் முன்பே உளவு தகவல்களை திரட்டி இருந்தது, குறிப்பாக எகிப்தினை மிக நன்றாக கணித்திருந்தார்கள். அங்கு மொசாத் உளவாளிகள் இருந்தார்கள்
எங்கோ பேசிவிட்ட நாசர், இன்னும் 2 மணிநேரத்தில் யுத்தத்தை தொடங்க நான் உத்தரவிடுவேன் என சொல்லி இருந்தார்
விஷயம் இஸ்ரேலுக்கு கடத்தபட்டது, அவர்களுக்கு இருந்தது 2 மணிநேர அவகாசமே, அதற்கும் எகிப்தின் பலம் வாய்ந்த விமானபடையினை முறியடிக்க வேண்டும்
நாசர் செய்த தவறு விமானங்களை வெறும் மைதானத்தில் நிறுத்திவைத்தது, அதை வாய்ப்பாக பயன்படுத்திய இஸ்ரேல் நொறுக்கி தள்ளியது கிட்டதட்ட 500 விமானங்கள் அழிக்கபட்டன
அதாவது எகிப்தின் முதுகெலும்பு முறிந்தது, அவை அன்றைய நவீன மிக் விமானங்கள்,களத்தில் இறங்கி இருந்தால் இஸ்ரேல் காலி
2 மணிநேரம் கழித்து நாசர் உத்தரவிட்டபொழுது பறக்க ஒருசில விமானங்களே இருந்தன, மனம் வெறுத்தார் நாசர்
ஆனால் யுத்தத்தை தொடங்கினார்
எகிப்திய விமானபடை வரும் என நம்பிய மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது
மோஷே தயானின் அட்டகாசமான தாக்குதல் திட்டம் மின்னல் வேகத்தில் நடந்தது
பெரும் படையினை எதிர்பார்த்த எதிராளிகளுக்கு தயானின் குழுவாய் பிரிந்து தாக்கும் நுட்பம் பிடிபடவில்லை, இஸ்ரேல் எல்லா திசையிலும் முன்னேறியது
வெறும் 6 நாட்களில் சண்டையினை எதிரிகள் நிறுத்தினார்கள், காரணம் விஷயம் எல்லை மீறி இருந்தது
எல்லா நாடும் தங்கள் நிலங்களை இழந்துகொண்டிருந்து, விட்டால் தலைநகரையே இஸ்ரேல் பிடித்துவிடும் சூழல் உருவானது
எகிப்தின் சினாய், சிரியாவின் கோலன் , ஜோர்டானின் ஜெருசலேம் என முக்கிய பகுதிகளை எல்லாம் கைபற்றியது இஸ்ரேல்
உலகின் மகா ஆச்சரியமான யுத்தங்களில் இன்றுவரை முதலிடத்தில் இருப்பது இஸ்ரேல் நடந்திய இந்த 6 நாள் யுத்தமே
அவ்வளவு துல்லியம், அவ்வளவு வேகம், அவ்வளவு ஒருங்கிணைப்பு
மோசே தயான் என்பவர் எப்படிபட்ட ஜெகஜால கில்லாடி என்பதை உலகம் உணர்ந்தது
இந்த சண்டைக்கு பின்பே மத்திய கிழக்கில் இருந்து சோவியத் வெளியேறிற்று, என்ன செய்தாலும் அராபியர்களால் இஸ்ரேலை வெல்லமுடியாது என அதற்கு விளங்கிற்று
இஸ்ரேலும் யுத்ததிற்கு பின் ராஜதந்திர நகர்வுகளை செய்தது
இதில் சினாய் திருப்பி கொடுக்கபட்டது அத்தோடு எகிப்துடன் வலுகட்டாயமாக அமைதி ஒப்பந்தமும் ஏற்பாடாயிற்று
ஆனால் கோலனும், ஜெருசலேலும் அப்படியே தக்க வைக்கபட்டன
இயேசு கொல்லபட்டபின் 70 ஆண்டுகள் கழித்து ஜெருசலேமினை இழந்த யூதர்கள் கிட்டதட்ட 2000 ஆண்டுகள் கழித்து ஜெருசலேமினை பெற்றார்கள்
அது இதே நாள், இதே ஜூன் 7
அது அவர்களிடம் கிடைத்து இன்றோடு 50 ஆண்டு ஆகின்றது, கொண்டாட்டம் களை கட்டுகின்றது
ஜெஹோவா ஆபிரகாமின் சந்ததிகளுக்கு இஸ்ரேலை கொடுத்தார் என ஆரவாரம் விண்ணை பிளக்கின்றது
ஜெருசலேமில் அந்த கொண்டாட்டத்தை கொண்டாடும் பொழுது பாலஸ்தீனியர் தடுப்பார் அல்லவா? என்ன செய்யலாம் என திட்டமிட்ட இஸ்ரேல் தந்திரமான காரியத்தை செய்துவிட்டது
பாலஸ்தீன கிராமம் ஒன்றினை இஸ்ரேல் முன்பு ஆக்கிரமித்தது, அதுயாருக்கு என்பதில் இன்றுவரை சண்டை
அங்கு கால்பந்து அரங்கம் கட்டி அர்ஜெண்டினா அணியினை அழைத்து விளையாட சொல்லிவிட்டது, கால்பந்து ஜூரத்தில் நனைகின்றார்களாம்
இதற்கு பாலஸ்தீனியர் எதிர்ப்பு தெரிவிக்க, பஞ்சாயத்து திசைமாற மிக தந்திரமாக ஜெருசலேமில் தன் 50ம் ஆண்டு வெற்றிவிழாவினை இல்லை கடவுள் கொடுத்த வெற்றியினை கொண்டாடுகின்றார்கள்
இனி அங்கு கோயில் கட்டவேண்டியதுதான் பாக்கி, அதற்கான ஆரம்ப விஷயம்தான் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் என்றானது
அதே நேரம் பலருக்கு நன்றி செலுத்துகின்றார்கள்?
யாருக்கு? அன்று மோஷே தயானோடு யுத்த தளபதிகளாக நின்று ஜெருசலேமினை மீட்டவர்களுக்கு
அவர்கள் யாரெல்லாம்?
ஏரியல் ஷெரோன், இட்சாக் ராபின், ஷிமன் பெரஸ், ஈசர் வேய்ஸ்மென், லெவி எஸ்ல்கோல், யோசே நக்ரீஸ், பென்ஞ்சமின் நேத்தான்யாகு என பலர்
இவர்கள் எல்லாம் பின்னாளில் இஸ்ரேலிய பிரதமர், பாதுகாப்பு அமைச்சர்கள் என உயர்ந்தவர்கள்
ஆம் அங்கு யார் நாட்டிற்காக துப்பாக்கி தூக்குகின்றானோ அல்லது உளவுதுறையில் சாதிக்கின்றானோ அவனுக்கே நாட்டை ஆளவும் பாதுகாக்கவும் தகுதி உண்டு என்பது விதி
ஆனால் அருமை தமிழகத்தில் எப்படி?
எவன் நன்றாய் சினிமாவில் நடிக்கின்றானோ அவனுக்கே முழு தகுதி இருப்பதாய் இங்கு விதி
அவர்கள் ஷிமன் பெரஸ், இட்சாக் ராபின், ஏரியல் ஷெரோன், எகுத் ஓல்மர்ட் பெஞ்சமின் நேத்தன்யாகு என்ற முன்னாள் தளதிகளை பிரதமராக்கி அந்த வரிசையினை வாழ்த்தி கொண்டிருக்கின்றார்கள்
நாமோ அண்ணா, கலைஞர், ராமசந்திரன், ஜெயா, பழனிச்சாமி என்றொரு வரிசையினை வைத்திருக்கின்றோம்
ரஜினி, கமல், விஜய் என அடுத்தவரிசையும் ரெடி.
(பழனிச்சாமி முன்பு நடிக்காமல் இருக்கலாம், இப்பொழுது அட்டகாசமான நடிப்பு)
பின் யார் உருப்படுவார்கள் என்றால் இஸ்ரேலியர்கள்தான் நிச்சயம் உருப்படுவார்கள்
தமிழகம் இந்த கோமாளிகள் ஆட்சியிலும் அழியாமல் இருக்கின்றது என்றால் இங்கு இருக்கும் கோவில்களும் அதன் தெய்வங்களுமே காப்பாற்றி வருகின்றன