யோகி ஆதித்யநாத் தாஜ்மஹால் பகுதியில் சுத்தம் செய்தார்
அறிவித்தபடி ஆக்ராவில் யோகி ஆதித்யநாத்: தாஜ்மஹால் பகுதியில் சுத்தம் செய்தார்
நல்லது, இந்தமாதிரி செய்திகள் மிக்க மகிழ்ச்சியினை தருகின்றன. சொன்னபடி 500 பேருடன் சென்று தாஜமாகாலை சுத்தபடுத்திய யோகிக்கு வாழ்த்துக்கள்
இத்தோடு தாஜ்மகால் சர்ச்சை முடியும் என பார்த்தால், யோகிக்கு அடுத்த சிக்கல் வந்துவிட்டது
அதாகபட்டது சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு தம்பதி தாஜ்மகாலுக்கு சுற்றுபயணம் வந்திருக்கின்றது, அவர்கள் மேல் உள்ளூர்காரன் எவனோ கல்லெறிந்து விளையாடியிருக்கின்றான்
ஏன் எறிந்தான் என தெரியவில்லை, இவ்வளவிற்கும் அவர்கள் மாட்டுகறி கேட்டதாகவும் தகவல் இல்லை
தாக்கபட்டவர்கள் காயம் அடைந்து ஆக்ராவில் சிகிச்சை பெறுகின்றார்கள், விஷயம் தெரிந்த சுவிஸ் அரசு சுஷ்மா சுவராஜினை பிராண்டுகின்றது.
“இதுவரை இப்படி நடக்கவில்லையே, தாஜ்மகால் சர்ச்சையாமே, ஐரோப்பியர்களை அங்கு செல்லவேண்டாம் என அறிவிப்பு செய்துவிடட்டுமா? ..” என்ற அளவிற்கு பாய்கின்றது
நிச்சயம் இது சர்வதேச சிக்கலாகலாம்,
தாஜ்மகாலை சுத்தபடுத்திய பின் யோகி அந்த சுவிஸ் மக்களுக்கு ஜூஸ் பிழிந்து கொடுத்து, கால் கை அமுக்கிவிட்டு பணிவிடை செய்யவும் வாய்ப்பு இருக்கின்றது
அநேகமாக யோகி அங்கே ஓடிகொண்டிருக்கலாம்