ரகுராம் ராஜனுக்கு உலகளாவிய மாபெரும் அங்கீகாரம்
இந்தியரான ரகுராம் ராஜனுக்கு இங்கிலாந்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அந்நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி அளிக்கபடலாம் என செய்திகள் சொல்கின்றன
இங்கிலாந்து நாட்டின் மிகபெரும் அப்பதவிக்கு உலகெல்லாம் இருந்து அனுபவமும் ஆற்றலும் கொண்டோரை தேடுகின்றார்கள், அப்பட்டியலில் இவர் பெயரும் இருக்கின்றது
உலக பொருளாதார புலி என அவரைத்தான் சொல்கின்றார்கள், அவர் சொன்ன பொருளாதார கணிப்புகள் அப்படியே நடந்த்துகொண்டிருப்பதுதான் அவர் மீதான பெரும் அபிமானத்திற்கு காரணம்
இந்த மாபெரும் மேதையினைத்தான் இந்திய ரிசர்வங்கி பதவியில் நீட்டிக்க விடமாட்டோம் என குறுக்கே படுத்துகொண்டது மோடி அரசு
இனி இங்கிலாந்து கவுரவிக்க போகின்றது
அறிவார்ந்தவர்களை எல்லாம் வெளிதள்ளிவிட்டு யோகா மாஸடர், பசுமாட்டு காவலாளி , கோவில் பூசாரி, கங்கை கரை அம்மண சாமியர்களை எல்லாம் கொண்டாடும் அரசு இது
இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் என்பது நினைத்து பார்க்கமுடியாத பணி, அது ஒரு அடுத்த நாட்டவருக்கு அதுவும் இந்தியருக்கு கிடைக்கும் என செய்திகள் வருவது சாதாரண விஷயமே அல்ல
ரகுராம் ராஜனுக்கு உலகளாவிய மாபெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது
நிச்சயம் ரகுராம் ராஜனுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் அங்கீகாரம் இந்த அரசின் தலைகுனிவு