ரஜினிக்கு எதிரிகள் அவரின் ரசிகர்கள்
கலாம் ஏன் இல்லாமல் போனார் என்றால் இம்மாதிரியான கொடுமைகளை காண சகிக்காமல் என முடிவு செய்யவேண்டியதாயிற்று
இந்த பாழ்பட்ட நாட்டில் அவர் ஏன் இருக்க வேண்டும்? அவர் தமிழனாய் பிறந்ததை தவிர என்ன பாவம் செய்தார்
இந்தபடம் நிச்சயம் ரஜினி மீதும் அவரின் ரசிகர்கள் மீதும் வெறுப்பையே மக்களுக்கு தரும், மிக மிக கண்டிக்கதக்க விஷயமாக தமிழகம் இதனை பார்க்கின்றது
ரஜினிக்கு எதிரிகள் எங்குமில்லை, அவரின் ரசிகர்கள் என அவருடனே இருக்கின்றனர்.
ஒரு மாமனிதனை, பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானியினை, நாட்டிற்காய் சந்நியாச கோலத்தில் உழைத்த அவதார பெருமகனை இப்படி கோலமிட்டு நிறுத்தியிருப்பது சட்டபடி தண்டிக்கவேண்டிய விஷயமுமாகும்.
ரஜினி இந்த ரசிகனை கண்டுபிடித்து, கலாம் சமாதி முன் கட்டி வைத்து பரிகாரம் தேடிகொண்டால் அவருக்கு நல்லது
“இங்க சிஸ்டம் சரி இல்ல, கடனை திருப்பி கேட்டா எப்படி? நல்ல சிஸ்டம்னா லதா வெளிநாடு தப்பி செல்ல உதவணுமா வேண்டாமா?
இங்க எல்லாமே கெட்டுபோய் கிடக்கு”