ரஜினிக்கு துணை என இந்த ராகவா லாரன்ஸ் …
“ஒரு பேய் அந்த வீட்டிலிருந்து வெளியேறியது, பின் வனாந்திரத்தில் தங்க இடமின்றி அலைந்துகொண்டிருந்தது, அந்த வீட்டை திருப்ப நோக்கியபொழுது அந்த வீடு அழகாக இருந்தது, உடனே அது தன்னிலும் பொல்லாத பல பேய்களை அழைத்து கொண்டு திரும்ப அந்த வீட்டுக்கே வந்தது
அந்த வீட்டு நிலை முன்னிலும் மகா மோசமானது”
இப்படி ஒரு வசனம் இயேசு சொன்னதாக பைபிளில் உண்டு, யாரை குறித்து எதற்கு சொன்னார்? , என்ன அர்த்தத்தில் சொன்னார்? என்பது இன்றுவரை எம் அறிவுக்கு புரியவே இல்லை
பாதிரியிடம் கேட்டால் பேய் போலவே முழித்தார்கள், பாஸ்டர் என்பவர்களிடம் கேட்டால் அந்நிய பாஷையில் பேசினார்கள், ஒரு பயலும் புரியும்படி சொல்லவே இல்லை
இப்பொழுது இந்த வசனம் நினைவுக்கு ஏன் வருகின்றது என்றால், இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ ரஜினி என்பவருக்கு பொருந்தும் போல
ரஜினிக்கு துணை என இந்த ராகவா லாரன்ஸ் என்பவர் குழுவோடு வருகின்றாராம், இன்னும் எத்தனை பேர் இப்படி வருவார்களோ தெரியாது. தமிழகத்தை என்ன செய்ய போகின்றார்கள் என்பதும் தெரியவில்லை
ஒருவேளை இயேசு இவர்களுக்குத்தான் சொன்னாரோ என்னமோ?