ரஜினியினை மிரட்டும் சக்திகள்
ரஜினி கலாநிதிமாறன் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக வரும் செய்திகள் காமெடி என கடந்து செல்லும் ரகம் அல்ல
அட்டகாசமான பதிலடி அதில் இருக்கின்றது.
ரஜினியும் கமலும் அரசியலுக்கு ஆசைபடுகின்றவர்கள் அல்ல, ஏதோ ஒரு சக்தி தள்ள அவசரகோலமாக வந்து நின்று “இப்போ சந்தோஷமா” என யாரையோ கேட்கின்றார் கமல்
ரஜினி இம்மாதிரி கட்சி தொடங்கவேண்டும் என்ற நெருக்கடிகளை பல காலமாக சந்தித்து மிக நைசாக நழுவி வருபவர், இம்முறை அவர் கட்சி தொடங்கியே தீர வேண்டிய நெருக்கடி
ஆனால் மனிதர் அட்டகாசமாக திமுக சார்பு என நகர்கின்றார், என்னை இதற்கு மேலும் தொந்தரவு செய்தால் என்னால் இப்படியும் செல்லமுடியும் என்ற எச்சரிக்கையினை யாருக்கோ கொடுக்கின்றார்
இனி ரஜினிக்கு நெருக்கடிகள் குறையலாம், அதே நேரம் கலாநிதிமாறன் படத்தில் நடிப்பது வியாபாரம் என ரஜினியும் நமட்டு சிரிப்போடு கடந்து செல்லலாம்
மிக மிக நுட்பமான ராஜதந்திர நகர்த்தலை ரஜினி செய்திருக்கின்றார் என்பது தெரிகின்றது, எந்த திமுகவினை விரட்ட திட்டங்கள் தீட்டபடுகின்றதோ அதனை மிக அழகாக திமுகமும் எதிர்கொள்கின்றது
இது ரஜினியினை மிரட்டும் சக்திகள் சற்றும் எதிர்பாரா விஷயம் என்பதால் அவர்களுக்கும் அதிர்ச்சி
இந்த அறிவிப்பில் பல ரகசிய அரசியல் இருந்தாலும், பட்டவர்தனமாக தெரிவது ஒன்றுதான், அது ரஜினி அரசியலுக்கு வருவது கண்ணுகெட்டிய தூரம் வரை தெரியவில்லை. அவரது ரசிகர்கள் வேறு வேலை இருந்தால் பார்ப்பது நல்லது
இதனை பார்க்கும்பொழுது அந்த முள்ளும் மலரும் வசனம்தான் நினைவுக்கு வருகின்றது
“கெட்ட பயசார் இந்த காளி, இரண்டு கையும் காலும் இல்லாமல் போனாலும் அவன் அரசியலுக்கு வரமாட்டான் சார்”