ரஜினியின் பலம் இதுதான், கதைக்காக அவர் படத்திற்கு யார் சென்றார்கள்?

கோடி கொடுத்தாலும் இந்த காலா படத்தை பார்க்க கூடாது என முடிவெடுத்திருந்தால் பாகம்பிரியாளுக்கோ பெரும் எதிர்பார்ப்பு

அது கதை சரியில்லை, இயக்கம் சரியில்லையாம் என சொன்னால். ரஜினி படத்தில் என்று கதை இருந்தது? கதைக்காக என்று ரஜினிபடம் பார்த்தோம் என படாரென பதில் வருகின்றது

ரஜினியின் பலம் இதுதான், என்று கதைக்காக அவர் படத்திற்கு சென்றார்கள்?

எவ்வளவோ சொன்னாலும், தேர் எப்படி இருந்தால் என்ன சாமிதான் முக்கியம், அது ஊர்வலம் வரும்பொழுது சாமியினைத்தான் பார்க்க வேண்டும். மாலை சரியில்லை, மேளம் சரியில்லை, விளக்கு சரிய்ல்லை என்றெல்லாம் சொல்லகூடாது என பலத்த வாதம்

நாமோ அசைவதாக இல்லை, ரஞ்சித்தை விட அந்த சந்தோஷ் நாராயணனின் இசை நினைத்தாலே பயமுறுத்துகின்றது

அவரோ திருவிழாவினை பார், சாமிக்கு மல்லிகை மாலை சூட்டபட்டால் என்ன? நித்திய கல்யாணி மாலை சூட்டபட்டால் என்ன? சாமி சாமிதான் என்ற நிலைபாட்டிலே இருந்தார்

ரஜினி எனும் நடிகர்சிங்கத்து பால், அதை தங்கதட்டில் வைக்காவிட்டால் கெட்டுவிடும். காலா அப்படி ஆயிற்று என்றால், ரஜினிதான் தங்கதட்டு அதன் மீது வைக்கபடும் எதுவும் அதற்கு ஈடாகாது, தட்டுதான் முக்கியம் என்ற பதில் பறந்து வருகின்றது

கடைசியில் பாகம்பிரியாள் தன் மிரட்டலை தொடங்கிவிட்டார, “காலா படம் பார்க்காவிட்டால் வீட்டில் குஷ்பு படம் ஓடாது சரியா?”

இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அங்குசத்திற்கு கட்டுபட்ட யானையாக தலையாட்டியாயிற்று.

விதி வலியது என்பதை சில இடங்களில் இப்படித்தான் உணர வேண்டி இருக்கின்றது

இந்த ஜூராசிக் பார்க் போன்ற டைனோசர் படங்கள், இன்னும் சில ஹாலிவுட் பேய் படங்களை பார்க்கும் போது ஏற்படும் ஒருவித திகில் உணர்வோடு காலாவிற்கு செல்லும் முடிவிற்கு சங்கம் தள்ளபட்டாயிற்று