ரஜினியின் முரட்டுகாளை படம்

Image may contain: Periya Samy, smiling

ரஜினியின் முரட்டுகாளை படம் ஓடுகின்றது, தமண்ணாவின் பாட்டி ரதி எனும் அக்னிகோத்ரி எல்லாம் நடித்திருக்கின்றார்கள்

படத்தில் ரஜினி காளையினை அடக்கி கொண்டிருக்கின்றார், இன்னும் கொஞ்சநேரத்தில் அண்ணனுக்கு ஜே என பாடுவார்கள், பாடட்டும்

நல்ல வேளையாக இந்த படம் முன்பே வந்தது, இப்பொழுது ரஞ்சித் இயக்கத்தில் வந்திருந்தால் என்னாயிருக்கும்?

ரஜினி காளையிடம் செல்வார், அங்கு திருவிழாவில் அய்யர் பூசை செய்து கொண்டிருப்பார். இரண்டையும் மாறி மாறி காட்டுவார்கள்

ரஜினி காளையிடம் வசனம் பேசுவார் எப்படி? இப்படி

“இங்க பார் மாடே, நீனும் உழைக்கிற ஜாதி நானும் உழைக்கிற ஜாதி. ஆனா நமக்குள்ள மோத விட்டு இங்க திருவிழா கொண்டாடுறானுக‌

என் உழைப்பும் உன் உழைப்பும் கலந்தது கொடுத்தது திருவிழா வரி, இங்க நாம ஏன் மோதனும்?

போ.. அந்த பூசாரிய குத்து, சாமி சிலைய உடை, புரட்சி செய்.. ஜெய் பீம்ம்ம்ம்ம்ம்ம்”