ரஜினியின் வாழ்க்கையில் அது ஒன்றும் ரகசியமல்ல

ரஜினியின் வாழ்க்கையில் அது ஒன்றும் ரகசியமல்ல, அது 1980களின் தொடக்க காலம், பிரியா உட்பட தொடர்ந்து அவர் நடித்துகொண்டிருந்த காலம்

பெங்களூரில் படபிடிப்பு மறுநாள் சிங்கப்பூர் மறுநாள் சென்னை என அவர் ஓயாது ஓடிகொண்டிருந்த நேரம்

இந்த சின்னப்பதேவர் ரஜினியினை அணைத்ததை எம்.ஜி ராம்சந்தர் ரசிக்கவில்லை, சிவாஜி பக்கம் தேவர் செல்லாமல் தடுத்த ராம்சந்தரால் தேவர் ரஜினியினை அணைப்பதை தடுக்க முடியவில்லை

ரஜினியுடன் நடிக்க ஜெயாவும் லதாவும் போட்டி போட்ட காலம் அவை, எல்லாம் சேர்ந்து அவரை மிக கடுமையான் எரிச்சலை அடைய வைத்தன‌

ராம்சந்தர் சாதாரண ஆசாமி அல்ல, அவருக்கு மிக சரியான உள்ளுணர்வு உண்டு, அதில்தான் திக கோஷ்டியில் இருந்தாலும் குடிக்காமல் கடவுள் எதிர்ப்பு பேசாமல் மிக பெரும் ஆளுமையாக உருவானார்

அந்த உள்ளுணர்வுதான் கருணாநிதியினை எதிர்க்க சொன்னது, அதுதான் ஜெயா மிக சரியான வாரிசாக இருப்பார் என அழைக்க சொன்னது, அதே உள்ளுணர்வுதான் ரஜினியினை எச்சரிக்க சொன்னது

இன்றைய காட்சிகள் ராம்சந்தர் மிக சரியாக கணித்திருக்கின்றார் என்பதை சொல்கின்றதா இல்லையா?

பாலசந்தருக்கும் ராம்சந்திரனுக்கும் பொருந்தாது, காரணம் ராம்சந்தர் நல்ல நடிகன் இல்லை என்பதில் தீர்மானமாய் இருந்தார் பாலசந்தர், அவர் தன்னைவிட்டு பாலையா போன்றோரை வைத்து படம் செய்தது அன்றே ராம்சந்தருக்கு வன்மத்தை கொடுத்தன‌

ரஜினி வளரும் வேளையில் இருந்தார், ராம்சந்தர் அவரை நசுக்கும் கோபத்தில் இருந்தார்.

வேலை, படபிடிப்பு, அரசியல் இடைஞ்சல்கள் என எல்லாம் ரஜினியினை குழப்பின,

அழுத்தம் அவருக்கு கூடிற்று, அப்பனோ அண்ணனோ சினிமாவில் இல்லா சுயம்பு ரஜினி, அவர் அழுகை ,கண்ணீர், வலி ,சந்தோஷம், மகிழ்ச்சி எல்லாம் பகிர்ந்துகொண்ட ஒரே ஆள் அவரேதான்

படபிடிப்பில் காட்டமுடியாத ஒருவித வேதனை அது

அந்த ஆத்திரத்தையும் வெறுப்பையும் ஏர்போர்ட்டில் தன்னை நோக்கி ஆட்டோகிராப் படம் என பார்த்தவர்களிடம் காட்டினார், சார் நீங்கதான ரஜினி என்றால் ஆமாம் அதற்கென்ன என சீறினார்

காரை ஒருவர் மேல் ஏற்றியும் விட்டார்

அதன்பின் படபிடிப்புக்கு ஓய்வு கொடுத்து மருத்துவமனையில் சேர்த்து ஓய்வில் குணபடுத்தினார்கள்

அந்த ரஜினி போராடிகொண்டிருந்தார், வில்லன் நடிப்பா? காமெடியா? கதாநாயகனா? என அவருக்கே தெரியா காலமது

எப்படியாவது நிற்க வேண்டும், நிலைக்க வேண்டும் என போராடினார், சொல்ல ஒன்றுமில்லை அவர்கள் சூட்டிங்கில் பாலசந்தர் செவிட்டில் அறைந்தவுடன் இனி தனக்கு எதிர்காலமே இல்லை என்றெல்லாம் நினைத்து அஞ்சினார்

அந்த அச்சமும் குழப்பமும் பயமும் பதற்றமும் கூடவே ஓயாத படபிடிப்பும் அவரை ஒருமாதிரி ஆக்கி வைத்திருந்தன‌

அதன் பின் மெல்ல ஆன்மீகம் பக்கம் சென்றார், அவருக்கு தெளிவு பிறந்தது

காலம் அவருக்கேற்றபடி மாறியது, அதுவரை விரோதித்த விதி வளைந்து கொடுத்தது

அதன்பின் அவர் கழுத்தில் ருத்ராட்சம் வந்தது, ஆன்மீகம் முழு தெளிவினை கொடுத்தது, வேகமாக ஏறி உச்சத்தில் அமர்ந்த ரஜினி அங்கேயே இருக்கின்றார்

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் முதலில் அவர் குழம்பி இருந்தார் ஆனால் மற்றவர்களிடம் தெளிவாக பேசினார்

இப்பொழுது அவர் மகா தெளிவாகிவிட்டார் மற்றவர்களை குழப்போ குழப்பு என குழப்பி அடிகின்றார்,

குழப்பி அடித்துவிட்டு ஓரமாக நின்று அவர்கள் குழம்பி தவிப்பதை ரசிக்கவும் செய்கின்றார்