ரஜினி அரசியலுக்கு வந்தாயிற்று….
ராதாபுரம் தொகுதியில் 500 வோட்டு கூட வாங்கமுடியாத உதயகுமார் ரஜினி எங்களுக்கு தேவையில்லை என புலம்புவது பெரும் கொடுமை
இப்படி தனிமைபட்டுத்தான் கூடங்குளம் போராட்டம் வீணாய் போனது, இன்னும் நாசமாய் போகும் திட்டம் எல்லாம் அன்னார் கையில் இருக்கும் போல
ரஜினி யாருக்கு தேவையில்லை என்பதை தமிழகம் முடிவு செய்யவேண்டுமே தவிர உதயகுமார் அல்லராதாபுரம் தொகுதியில் 500 வோட்டு கூட வாங்கமுடியாத உதயகுமார் ரஜினி எங்களுக்கு தேவையில்லை என புலம்புவது பெரும் கொடுமை
இப்படி தனிமைபட்டுத்தான் கூடங்குளம் போராட்டம் வீணாய் போனது, இன்னும் நாசமாய் போகும் திட்டம் எல்லாம் அன்னார் கையில் இருக்கும் போல
ரஜினி யாருக்கு தேவையில்லை என்பதை தமிழகம் முடிவு செய்யவேண்டுமே தவிர உதயகுமார் அல்ல
“ரத்தத்தின் ரத்தமே..” என ஒருவர் சொல்லும்பொழுது , அது எப்படி என் உடலிலும் உன் உடலிலும் ஒரே ரத்தம் ஓடமுடியும்? என பகுத்தறிவு கேள்வி கேட்காதவன் எல்லாம் ,
ஈழத்தில் இருப்பது என் அக்கா தங்கச்சி, முருகன் என் முப்பாட்டன் என ஒருவன் அளந்துவிடும்பொழுது “அது எப்படிடா சாத்தியம்”” என கேட்காதவன் எல்லாம்
ரஜினி ஆன்மீக அரசியல் என்றவுடன் ஓடிவந்து விளக்கம் கேட்கின்றானாம்
ரஜினி அரசியலை கடுமையாக எதிர்ப்போம் : சீமான்
இந்தியாவிலே, ஏன் உலகிலே ஒரு ஜனநாயக நாட்டில் “அவனை கட்சி தொடங்க சொல்லாதீர்கள், நான் செத்துவிடுவேன்..”” என ஒருவன் கதறும் பரிதாபம் இங்குதான் நடக்கின்றது.
இப்படி ஒரு அழிச்சாட்டியம் எங்காவது உண்டா?
அங்கிள் சைமன் இதெல்லாம் உங்கள் மேல் காமெடியும் , எரிச்சலும்தான் கொண்டுவருமே தவிர 4 வோட்டு கூட கொண்டுவராது
நீ ரஜினி ரசிகனா, கலைஞர் ரசிகனா என ஆளாளுக்கு கேட்டுகொண்டிருக்கின்றார்கள்
அப்படி அல்ல விஷயம், பொதுவான உண்மைகளை யாரும் சொல்லலாம், அபப்டித்தான் இங்கும் சொன்னோம்
மற்றபடி எம்மையும், எம்மை ஆட்கொண்ட ஒரே தலைவி குஷ்பு ஒருவரே, அது எந்நிலையிலும் மாறா
ரஜினி கட்சி உருப்படவேண்டுமென்றால் அதன் முக்கிய தேவை தலைவிக்கு “செயல் தலைவர்” பதவி கொடுத்து அமர்த்த வேண்டியது, அதை செய்தால் ரஜினி கட்சி நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும்
ரஜினி தேசநலனுக்காக எம்மோடு கரம்கோர்த்து செயல்பட வேண்டும் : தமிழிசை
அதானே, சொந்த உழைப்பில் கட்சியினை வளர்த்துவிடவே கூடாது, யார் முதுகிலாவது ஏறி சென்றுகொண்டே இருக்கவேண்டும் அப்படித்தானே அக்கா?
ரஜினி அரசியலுக்கு வந்தாயிற்று, ஆனால் இன்னும் பிரதான கட்சிகள் வாய்திறக்கவில்லை
ஆனால் அன்று ராமசந்திரன் கட்சி கண்டபொழுது, நீதி அநீதி நியாயம் அநியாயம் என இருப்பது போல, திமுக அதிமுக என்றொரு நிலை வரும் என சொல்லி நகர்ந்தவர் கலைஞர்
இன்று அவர் நலமாக இருந்தால் முதல் வாழ்த்து ரஜினிக்கு அவரிடம் இருந்துதான் வந்திருக்கும்
அந்த கலைஞரின் இடத்தில் தகுந்த ஆட்கள் இன்றி தடுமாறுகின்றது திமுக