ரஜினி இமயமலையில் இருந்து வந்துவிட்டார், இனி காலா படம் வரும்
ரஜினி இமயமலையில் இருந்து வந்துவிட்டார், இனி காலா படம் வரும் என்கின்றார்கள்
படத்தின் கதைபடி ரஜினி கருப்பு தமிழர், சேரிவாழ் தமிழர் இன்னபிற புரட்சி, தலித், தமிழராக இருக்கட்டும் ஆனால் சிக்கல் வேறுவகையில் புகைகின்றது
அதாகபட்டது மும்பையின் ரவுடி சாம்ராஜ்யத்தை பெரும்பாலும் ஆண்ட ரவுடிகள் எல்லாம் இஸ்லாம் மதத்தவராக இருந்து தொலைத்துவிட்டார்கள்
ஹாஜி மஸ்தானில் இருந்து தாவுத் வரை அப்படித்தான்
மும்பை தமிழ் ரவுடிகள் எல்லாம் இந்த ஹாஜி மஸ்தான் போன்ற ரவுடிகளுக்கு அடங்கிய கூலி ரவுடிகளாகவே இருந்தார்கள், வரதராஜ முதலியார் என்பவர் கூட அந்த வகைதான்
வரதராஜ முதலியார் பின்பு சமயம் சார்ந்து விநாய சதுர்த்தி விழா நடத்தி இந்து நிலை எடுத்தார், அதோடு அவர் சாம்ராஜ்யம் முடிந்தது
இதனை முதலில் கண்டித்தவர் பால் தாக்கரே, அவர் இந்து. அது பின்னர் இந்து முஸ்லிம் பிரச்சினையாக மாற்றபட்டு பின் மும்பை கலவரத்திற்கே காரணமாயிற்று.
தாவுத் இப்ராகிமும் சோட்டா ராஜனும் பிரிந்து இஸ்லாமிய காவல், இந்து காவல் என மோதிகொண்டது பின்னாளில் நடந்தது
இதில் காலாவிற்கு என்ன சிக்கல்?
ரஜினி பாத்திரம் போராளியாக, புரட்சியாக , கருப்பாக இருக்கலாம் ஆனால் எல்லா மும்பை தமிழ்ரவுடியும் அன்று பிரபல முஸ்லீம்களான ஹாஜி மஸ்தான் போன்றோருக்கு கூலிபடைகளே
தாராவி தமிழ் பாதுகாலவர்களை பற்றி சொல்லும்பொழுது அவர்களுக்கு மேலிருந்தவர்களை பற்றி சொல்லாவிட்டால் அது மாபெரும் மோசடி, ஒருபக்க சார்பு என சில செய்திகள் கசிகின்றன
விஷயம் ஒருமாதிரி செல்கின்றது
மும்பை முஸ்லீம் ரவுடிகளை ஏன் ரஞ்சித் மறைக்க வேண்டும், தமிழரின் எல்லா போராளிகளும் அவர்கள் அடியாட்கள் அவர்களின் ஒருவர் கதைதான் காலா ,
ஆனால் காலாவின் மேலிடம் பற்றி மூச் என்றெல்லாம் முணுமுணுப்புகள் வருகின்றன
சாதி ஒழிப்பு பேசலாம், ஆனால் மதபோர்வையில் ஒளிந்திருந்த சமூகவிரோதி ரவுடிகளை ஏன் காலா பேசுமா? என பலர் இப்பொழுதே எதிர்ப்பார்க்க ஆரம்பித்தாயிற்று
ஆக ரஜினிக்கு நேரம் சரியில்லை. ரஞ்சித் என்பவரிடம் சிக்கி ரஜினி இரண்டாம் முறையாக கும்மாங்குத்து வாங்க போகின்றார்.
சும்மாவே இந்து அமைப்புகள் வெறி ஏறி போய் எங்கு இந்து மத அபிமானத்தை காட்டலாம் என தினவெடுத்து திரியும் நேரமிது
இப்பொழுது முஸ்லீம் ரவுடிகளின் அட்டகாசத்தை ரஜினி படம் சொல்லவில்லை என ஒரு படம் வந்தால் தாங்குமா?