ரஜினி பாபாவிடம் பத்துமுறை கேட்டுவிட்டு வருவது நல்லது

இப்பொழுதெல்லாம் ரஜினி மீது திமுகவினர் பொங்குவதில்லை காரணம் ரஜினி கலாநிதிமாறன் படத்தில் நடிக்க போகின்றாராம்

கலாநிதிமாறன் என்ன திமுக தலைவரா?

முன்பு ஒரு டிவி காட்சியில் ரஜினியினை கிழித்துகொண்டிருந்தார் ராதாபுரம் அப்பாவு, ரஜினியின் சைக்கிள் சின்னத்தால் முதலில் வென்ற அதே அப்பாவு

இப்பொழுது அவர்கள் எல்லாம் சத்தமில்லை, ஏன் என்றால் ரஜினி கலாநிதிமாறன் படத்தில் நடிப்பதால் திமுக மேலிடம் ரகசிய சிக்னல் என்கின்றார்கள்.

இப்பொழுது அப்பாவு கத்துவாரா என்றால் நிச்சயம் இல்லை, மகா அமைதி

ஆனால் உண்மையான திமுகவினர் ரஜியியின் கலாநிதிமாறன் படத்தை விரும்புவார்களா என்றால் நிச்சயம் இல்லை

அப்படம் நிச்சயம் மாபெரும் தோல்வியினை தழுவும் என இப்பொழுதே சொல்லிவிடலாம்

கட்சியின் எதிர்காலம் கருதி அந்த படத்தை விட்டுவிடுவதுதான் திமுகவினருக்கு நல்லது

ஒரு நடிகனுக்காக, அவர் படத்திற்காக திமுக‌ தன் தொண்டர்களை அமைதிபடுததுவது சரி இல்லை

ஒருவேளை ரஜினியினை நடிக்க வைத்து படத்தை தோல்வியாக்கி ரஜினி முகத்தில் கரிபூசுவதுதான் திமுகவின் திட்டமாக இருக்குமோ?

எதற்கும் ரஜினி பாபாவிடம் பத்துமுறை கேட்டுவிட்டு வருவது நல்லது


மாநில உணர்வுகளை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கதக்கது : தமிழிசை

ஆமாம், மத உணர்வுகளை வைத்தே இங்கு அரசியல் செய்ய வேண்டும் , மசூதி எல்லாம் இடிக்க வேண்டும் மாட்டின் பெயராலும் சண்டைகள் வர வேண்டும், அதன் பெயர் நாட்டுபற்று.


இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராகுகாந்தி எங்கு சென்றார்?- தமிழிசை கேள்வி

சரி அவருக்காவது தந்தையினை இழந்த வலி இருந்தது, உங்கள் கட்சிக்கு என்ன வலி இருந்தது? எங்கு சென்று தொலைந்தீர்கள் அம்மணி?