ரதத்தோடு வந்துவிட்டார்கள், இதற்கெல்லாமா சண்டைகள்?

உபியில் வென்றால் இந்தியா முழுக்க லட்டு கொடுப்பதும், உபியில் தோற்றால் இந்தியா முழுக்க ரதம் இழுப்பதும் இவர்கள் வழக்கம்

இது ஒருவகையில் ஒப்பாரி

இது தெரியாமல் ஆளாளுக்கு எதிர்க்கின்றார்களாம். அவர்களே மகா துயரத்தில் ரதமேறி ஆறுதல் தேடிகொண்டிருக்கின்றார்கள் அவர்களை போயா வம்புக்கு இழுப்பது?

காசி முதல் ராமேஸ்வரம் வரை எந்நாளும் இந்துக்கள் சாதா காலமும் நடந்த பூமி இது, பன்னெடுங்கால வரலாறு அதை சொல்கின்றது

தென்னவர்கள் காசிக்கும், வடக்கத்தியர்கள் ராமேஸ்வரத்திற்க்கும் வந்து செல்வது தொன்று தொட்டு வருவது

அப்படி வந்திருக்கின்றார்கள், என்ன ரதத்தோடு வந்துவிட்டார்கள், இதற்கெல்லாமா சண்டைகள்?

இதில் முன்னணியில் இருப்பது வைகோ, எந்த வைகோ?

வாஜ்பாயுடனும் , ரதமேறிய முன்னோடி அத்வானியுடனும் கூட்டு வைத்த அதே வைகோவும் அந்த திமுகவும் அத்வாணி ரதமேறிவந்தால் சத்தமில்லையாம், பின்பு அவர் ஆட்சியிலும் பங்கெடுப்பார்களாம்

இப்பொழுது ரதம் வந்தால் பொங்குவார்களாம்.

பாஜகவோடு முதலில் கூட்டு வைத்து இங்கு அறிமுகபடுத்தியதே இவர்கள்தான்.

வாஜ்பாய் அத்வாணியோடு முரசொலிமாறன் அதாவது கலைஞரின் மனசாட்சி நின்ற காட்சிகள்தான் முதலில் தமிழகத்தில் பாஜக காலூன்றிய காட்சி

இருந்து பாருங்கள், மோடி பெரும்பான்மை இழக்கும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் இவர்கள்தான் அவர்கள் ஆட்சியின் கூட்டணியாக இருப்பார்கள்

அப்பொழுது பேச வசதியாக இதனை குறித்துகொள்ளுங்கள்