ரம் ஊற்றிய தோசை ?

தோசைமாவு அரைப்பது எப்படி என பாடம் கேட்டான் ஒருவன், நாமும் அகத்திய முனிவன் தொல்காப்பியனுக்கு போதித்தது போல போதித்தோம்

அரியியினை உளுந்தை இவ்வளவு அளவு ஊற வை, கொஞ்சம் வெந்தயம் சேர்த்துகொள் என சொல்லிவிட்டு சென்றால் அரிசி உளுந்து, வெந்தயம் அவன் தேடி கண்டுபிடித்த நுட்பமான ஜவ்வரிசி எல்லாம் கலந்து ஒன்றாக ஊற வைத்திருகின்றான்

யார் அய்யா நீ என நோக்கினால், அண்ணாச்சி இனி என்ன செய்ய வேண்டும் என மிக கவனமாக கேட்டான்

ஒரு வோட்காவோ,ரம்மோ வாங்கி கொண்டு வா அரைக்கும் பொழுது ஊற்றி அரைக்கலாம் அப்படி வரும் தோசை என சொல்லியாயிற்று

மிக மகிழ்ச்சியுடன் ஓடி சென்றிருக்கின்றான்

கேக் தான் ஒயின் ஊற்றி தயாரிக்க வேண்டுமா? ரம் ஊற்றிய தோசை எப்படி வருகின்றது என நாளை பார்த்துவிட வேண்டியதுதான்