ரஷ்யா தன் அதிரடிகளை ஆரம்பித்தாயிற்று…
கொஞ்சநாளாக அமைதியாக இருந்த ரஷ்யா தன் அதிரடிகளை ஆரம்பித்தாயிற்று, முன்பு ரஷ்யாவின் உளவு பிரிவு செய்த சாகசங்கள் ஏராளம். சோவியத் பிரிவுக்க்கு பின் அமைதி ஆயினர். இப்பொழுது வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று
அதாவது ரஷ்ய உளவாளி ஒருவர் பிரிட்டனுக்கு 2006 முதல் தகவல் அனுப்பி கொண்டிருந்திருக்கின்றார். இதனை தாமதமாக 2010ல் அறிந்த ரஷ்யா அவரை பிடித்து சிறையில் போட்டது
பிரிட்டனின் MI5 சாதரண உளவு பிரிவா? அவர்களுக்கும் லண்டனில் இருந்த ரஷ்ய உளவாளி பட்டியல் இருந்தது
பட்டியல் இருந்தும் ஏன் விட்டு வைத்தார்கள் என்றால் அதுதான் தந்திரம், அப்பொழுதுதான் பொய் செய்திகளை அனுப்பி குழப்ப முடியும்
அந்த பட்டியலில் இருந்த ஒருவரை பிடித்து சிறையில் போட்டது பிரிட்டன், பின்பு என் ஆளை நீ கொடு உன் ஆளை நான் விடுகின்றேன் என ஒப்பந்தம் செய்து , பிரிட்டனின் உளவாளி லண்டன் வந்தார்
MI5 உளவு மூளை என்ன செய்தது?, லண்டன் வந்தவருக்கு பெயர் , முகம், முகவரி என எல்லாவற்றையும் மாற்றி பிரிட்டனின் ஒரு இடத்தில் தங்க வைத்தார்கள், காரணம் ரஷ்யா பழிவாங்கலாம் எனும் அச்சம்
இப்படி 8 வருடம் கழிந்தன, இந்த உளவாளிக்கு ஒரு மகள் இருந்தாள். நிச்சயம் ரஷ்ய உளவுதுறை இனி தன்னை கண்டுபிடிக்க முடியாது தன் தோற்றம் மாறிவிட்டது என அந்த உளவாளி நம்பிகொண்டு லண்டனில் உல்லாசமாக இருந்தார்
ரஷ்யா என்ன செய்தது? அவரின் மகளை பின் தொடர்ந்தது. சுமார் 8 வருடம் கழித்து அந்த மகள் தந்தையினை காண சென்றிருக்கின்றாள்
அந்த உளவாளியின் முகம் மாறி இருக்கலாம், அடையாளம் மாறி இருக்கலாம், இதில் ரஷ்யா திணறி இருக்கலாம்
ஆனால் பாசம் மாறுமா? மகளை பார்த்ததும் பாசத்தில் கட்டிபிடித்து அழுதுவிட்டார். கவனித்துகொண்டிருந்த ரஷ்ய உளவாளி இவர்தான் அவர் என உறுதிபடுத்திவிட்ட்டார்
கிட்டதட்ட பழைய “ஞானஒளி” சினிமா கதைதான், அடையாளம் மாறினாலும் பாசம் மாறாது எனும் மூலகதைதான்,
நாம் என்றோ சினிமாவாக எடுத்துவிட்டோம் தமிழ் சினிமா என்றால் சும்மாவா?
ஆக விஷயம் உறுதிபடுத்தியபின் என்னாயிற்று?
அந்த உளவாளியும் மகளும் ஒரு பாரில் பீர் குடித்திருக்கின்றார்கள், ஒரு மனிதர் வந்திருக்கின்றார் அவரும் பீர் குடித்துவிட்டு கிளம்பியிருக்கின்றார்
கிளம்பியவுடன் இந்த உளவாளியும் மகளும் வாந்தி மயக்கமாக சரிந்திருக்கின்றார்கள்,
பீரில் விஷமில்லை, இருவருக்கும் உணவிலும் மருந்து இல்லை என மருத்துவர்கள் தேடினால் விவகாரம் வேறுமாதிரி இருந்திருக்கின்றது
அதாவது சிக்ரெட் லைட்டரில் நச்சுவாய்வு கொண்டுவந்த அந்த ரஷ்ய நபர், அதை இவர்கள் அருகே கசியவிட்டு அவர் போக்கில் சென்றிருக்கின்றார்
இப்பொழுது தந்தையும் மகளும் கோமா நிலையில் இருக்கின்றார்கள், லண்டனில் புகுந்து தன் துரோகியினை போட்டு தள்ளியிருக்கின்றது ரஷ்யா
புட்டீனின் ரஷ்யா அப்படித்தான், புட்டீனே முன்பு ரஷ்ய உளவாளியாக இருந்தவர். அவர் பயிற்சி அப்படித்தான் இருக்கும்
பிரிட்டன் உளவுதுறை ஆடிபோய் இருக்கின்றது, பெரும் பெருமை மிக்க பிரிட்டன் உளவுதுறையான MI5 கோட்டையில் நுழைந்து ரஷ்யா அடித்திருப்பது அவர்களுக்கு பெரும் அவமானமாக படுகின்றது
இனி அதன் பதிலடி எப்படி இருக்குமோ? ஆனால் ரஷ்யாவோ அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என அசால்ட்டாக சொல்கின்றது