ராகுலின் செயல் வாழ்த்துகுரியது

எல்லையில் அட்டகாசம் செய்கின்றது சீனா, உண்மையில் அது மல்லுக்கு நிற்பது பூட்டானுடன், பூடான் எதிர்க்கின்றது அதன் பிண்ணனியில் இந்தியா இருக்கின்றது

காரணம் இந்த டோல்கம் அல்லது தொங்லாக் சீன வசம் சென்றால், அதன் பின் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவோடு இணைக்கும் கோழி கழுத்து எனப்படும் முடிச்சினை சீனா நெருங்குவது மிக எளிது

அதன் பின் யுத்தம் வெடிக்குமாயின் வடகிழக்கு மாநிலங்கள் துண்டிக்கபடும், அது மிக பெரும் குழப்பமாகும், இந்தியா அஞ்சுவது அதற்குத்தான், சீனா திட்டமிடுவதும் அதற்குத்தான்

இது 3 வாரங்களாக நடக்கும் பிரச்சினை, ஒரே ரோடு ஒன் பெல்ட் என ஆசியா முழுக்க சாலை அமைக்கும் சீன பெருங்கனவில் வந்த சிக்கல்

சர்ச்சைகுரிய சிக்கிம் எல்லையில் அந்த பிரச்சினை நடக்கின்றது, சீன ஏடுகள் போர் எனவும், பூட்டானுடன் இந்தியா சேர்ந்தால் நாம் பாகிஸ்தானோடு சேர்ந்து போர்கோலம் காணவேண்டும் எனவும் கரித்து கொட்டுகின்றன‌

நீங்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்தால் எங்களுக்கு வியட்நாம், ஜப்பான், தைவான் என கைகோர்க்க தெரியாதா? சுற்றிலும் எதிரிகளை வைத்திருக்கும் விவஸ்தை கெட்ட நாடுதானே நீங்கள் என்பது போல இந்திய நகர்வு இருக்கின்றது

இந்நிலையில் ராகுல்காந்தியும் சீன தூதரை சந்தித்திருக்கின்றார், இந்தியாவின் எதிர்கட்சி தலைவரும் சீன தூதரை சந்தித்து தன் கருத்தை சொன்னது சரியே

இந்த யுத்தமாக வெடிக்கு முன் அதனை நிறுத்த எல்லா வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்

இது மோடிக்கு மட்டுமான பொறுப்பு என சொல்ல முடியுமா? எதிர்கட்சிக்கு பொறுப்பு இல்லையா?

எல்லா இந்தியனுக்கும்தான் பொறுப்பு இருக்கின்றது

ராகுல் சீன தூதரை சந்தித்தது ஏற்றுகொள்ள கூடிய ஒன்று, நாட்டுபற்றுள்ள எதிர்கட்சியாக அவர் சீன தூதரை சந்தித்திருக்கின்றார், பூட்டான் தூதுவரையும் சந்தித்திருக்கின்றார்

இதில் கண்டிக்க என்ன இருக்கின்றது?

ராகுலின் செயல் வாழ்த்துகுரியது, எப்படியும் சீனா அவ்வளவு எளிதில் யுத்தத்தை தொடங்காது .

எனினும் இத்தேசம் ஒன்றாய் சீனாவிற்கு தன் எதிர்ப்பினை தெரிவிப்பதில் நமது ஒற்றுமை தெரிகின்றது

வந்தே மாதரம்..


அவர் மட்டும் எல்லா நாட்டுக்கும் போவாராம் எல்லோருடனும் பேசுவாராம்

சில நேரம் சொல்லாமல் கொள்ளாமல் பாகிஸ்தானில் கூட இறங்கி கேக் ஊட்டுவாராம்

இந்த ராகுல் பக்கத்து நாட்டு பூட்டான் தூதரிடம் பேசும்பொழுது இந்த சீன தூதர் அருகில் இருந்திருக்கின்றார்

இது ஒரு குற்றமா?

ராகுல் என்ன பேசினார் என தெரியவேண்டுமாம் , ஏன் மோடி உலகெல்லாம் என்ன பேசுகின்றார் என யாராவது கேட்கின்றார்களா?