ராகுலுக்கு முடிசூட்ட தயாராகின்றார் சோனியா காந்தி
ராகுலுக்கு முடிசூட்ட தயாராகின்றார் சோனியா காந்தி
உண்மையில் சோனியா வாழ்ந்தது தியாக வாழ்வு. இந்திராவின் வாரிசை வேரறுப்போம் என கிளம்பிய பல கும்பல்கள் சீக்கிய பெண்ணான மேனகாவினை விட்டுவிட்டன. அவர்கள் குறி ராஜிவ் குடும்பத்தை நோக்கியே இருந்தது
இதில் ஈழ சிக்கலும் சேர்ந்தது, ராஜிவின் குடும்பத்தை வேரறுப்பேன் என முதலில் வெறிபிடித்து திரிந்தது ஈழப்போராளி உமா மகேஸ்வரன்
இது போக காஷ்மீர், அசாம் என உள்நாட்டு தீவிரவாதிகளும், யாசர் அராபத்தே எச்சரித்த வெளிநாட்டு சக்திகளும் ராஜிவ் குடும்பத்தை குறிவைத்து அலைந்தன
இவை எல்லாவற்றையும் அறிந்து அஞ்சி அஞ்சி வாழ்ந்தவர்தான் சோனியா
ஆனால் பிரபாகரன் முந்திகொண்டான், ராஜிவ் கிழித்தெறியபட்டார்
இன்னொரு பெண் என்றால் அன்றே மூட்டை முடிச்சுகளை கட்டிகொண்டு கிளம்பியிருப்பாள்
மாமியார், கொழுநன், கணவன் என மூன்றுபேரின் கோரமரணத்தை கண்ட எந்தபெண்ணும் அம்முடிவிற்கே வந்திருப்பாள்
ஆனால் பாரத கலாச்சாரத்தில் தன்னை நிறுத்திகொண்ட சோனியா அப்படி செய்யவில்லை, இந்திய மகளாக நிலைத்தார், அரசியலில் இருந்து ஒதுங்கித்தான் இருந்தார்
ஆனால் காங்கிரஸ் தள்ளாடியது, தடுமாறியது. சரியான நபர் இல்லாமல் நொறுங்கும் நிலையில் இருந்தது
அப்பொழுதுதான் அரசியலுக்கு வந்தார் சோனியா, அவரின் வருகை காங்கிரசுக்கு பேரேழுச்சியினை கொடுத்தது. கட்சி ஆட்சிக்கும் வந்தது
ஆனாலும் பதவியில் அவர் அமரவில்லை, அமர விருப்படவுமில்லை அந்த நாற்காலியில் யார் அமரவேண்டுமோ அவரை அமர்த்தினார்
பல விஷயங்களில் சோனியாவின் அணுகுமுறை பாராட்டதக்கது, மிக நுணுக்கமாக திறமையாக கட்சியினை நடத்தினார்
இத்தேசம் இந்திராவின் மருமகளாகவும் காங்கிரசின் தலைவியாகவும் அவரை மனமார ஏற்றும்கொண்டது
இப்பொழுது 70 வயதை நெருங்கும் சோனியாவின் உடல்நிலை அவ்வளவு சரி இல்லை என்கின்றன செய்திகள்
அந்நிலையில்தான் ராகுல் காந்தியினை தலைவராக்க போகின்றார் என்கின்றார்கள், அநேகமாக இந்திரா நினைவுநாளில் அது அறிவிக்கபடலாம்
அப்படியே பிரியங்காவிற்கு தான் போட்டியிடும் ரேபரேலி தொகுதியினை கொடுக்க போகின்றாராம்
இவை எல்லாம் குறிப்பால் ஏதோ உணர்த்துகின்றன, எதற்கோ தயாராகின்றார் சோனியா, கண்கள் கலங்கும் தருணமிது.
அவரின் வாழ்விலும் , தனிபட்ட விவகாரங்களிலும் எதிர்கட்சி கூட, கொடும்பாவி கூட ஒரு கறை காட்ட முடியாது. நிச்சயம் அது கவனமான தூய வாழ்வு.
மிக உறுதியாக சொல்லலாம், சோனியா வாழ்ந்தது வாழ்வது எல்லாம் தியாக வாழ்வு. “தியாக தலைவி” என்பது சோனியாவிற்கு 100% பொருந்தும்.
ராகுல் வரட்டும், இத்தேசத்திற்காய் தன் சொத்துக்களை எல்லாம் அள்ளி கொடுத்தார் நேரு, தன் உயிரை கொடுத்தார்கள் இந்திராவும் ராஜிவும்
அந்த வம்சத்தில் வரும் ராகுலை வாழ்த்துவோம்
ராகுலை காங்கிரஸ் தலைவராக்கிவிடுவார் சோனியா, ஆனால் அவர் பிரதமர் ஆவாரா? என கேள்விகள் எழலாம்
மோடி என்ன செய்துகொண்டிருக்கின்றார் என நினைக்கின்றீர்கள்?
அடுத்த தேர்தலில் காங்கிரசை பதவியில் அமர்த்தும் அத்தனை விஷயங்களையும் இம்மி பிசகாமல் செய்து கொண்டிருக்கின்றார் மோடி
நிச்சயம் ராகுலை பிரதமர் ஆக்காமல் மோடி ஓயமாட்டார். அந்த நல்ல காரியத்திற்காக மோடி தலமையில் பாஜகவே தேசமெங்கும் பெரும் யாகத்தில் ஈடுபட்டிருக்கின்றது.
மோடியும் சிறுவயதிலே மனைவியினை விரட்டிவிட்டு நாட்டிற்காய் வாழ்ந்தார், அவரை “தியாக தலைவன்” என சொல் என சிலர் கிளம்புகின்றார்கள்
இவர்களை எல்லாம்….
மோடி தியாக தலைவன் என அதானியும், அம்பானியும் அமித் ஷா மகனும் வாய்நிறைய சொல்வார்கள், போய் கேட்டுகொள்
மோடியின் தியாகம் நிச்சயம் அவர்களுக்கானது அல்லவா?, அதனை சொல்லாவிட்டால் அம்பானி, அதானி எல்லாம் நாசமாய் போகட்டும்